புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜூன், 2014

வெற்றி வாகை சூடியது சிவன் 
கைதடி மேற்கு சனசமூக நிலையத்தின் 66வது ஆண்டு நிறைவை முன்னிட்டு குமரன் விளையாட்டுக் கழகம்
நடாத்தும் தென்மராட்சி பிரதேச கழகங்களுக்கிடையிலான 9பேர் பங்குபற்றும் 12பந்து பரிமாற்றங்களைக் கொண்ட 
மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிச்சுற்றுப்போட்டி  கடந்த ஞாயிற்றுக்கிழமை 2.30 மணியளவில் கைதடி 
குமரநகர் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது.
 
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற வளர்மதி விளையாட்டுக்கழகம்  முதலில் துடுப்பெடுத்தாடியது.
11.3பந்துப்பரிமாற்றங்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 92ஓட்டங்களை பெற்றது.
 
93ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலையில் துடுப்பெடுத்தாடிய சிவன் விளையாட்டுக்கழக அணி
11.4பந்துப்பரிமாற்றங்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 94ஓட்டங்களை பெற்று மேலதிக2ஓட்டங்களால் 
வெற்றியை தனதாக்கிக் கொண்டது.
 
மேலும் இந்தப் போட்டியில் ஆட்டநாயகனாக சிவன் விளையாட்டுக்கழக செந்தூரனும் தொடர் ஆட்டநாயகன்; மற்றும் 
சிறந்த துடுப்பாட்ட வீரனாக மட்டுவில் வளர்மதி விளையாட்டுக் கழக அஜந்தனும் தெரிவு செய்யப்பட்டனா்.
 
 
விளையாட்டுக் கழகம் 

ad

ad