புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜூன், 2014

இறுதி சடங்கை பார்க்கச் சென்று உயிரை விட்ட 7 பேர்
சீமாந்திரா மாநிலத்தில் இறுதி சடங்கை பார்க்க சென்ற 7 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
சீமாந்திரா மாநிலம் கடப்பா மாவட்டம் நவாப் பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சீவநாயுடு. இவர் கடந்த 2ம் திகதி டிராக்டர் மோதி பலியாகியுள்ளார்.
இதனையடுத்து, நேற்று மாலை அவரது இறுதி சடங்கு நிகழ்ச்சி நடந்துள்ளது.
அவரது இறுதி சடங்கு நிகழ்ச்சிகளை பார்ப்பதற்காக அந்த பகுதி மக்கள் அங்குள்ள ஒரு பழைய கட்டிடத்தில் ஏறி நின்றுள்ளனர்.
இந்நிலையில், அந்த கட்டிடத்தின் சுவர் மழையால் நனைந்து இருந்ததால், பொது மக்கள் ஏராளமானோர் ஏறி நின்றதால் அந்த கட்டிடம் திடீரென்று இடிந்து விழுந்துள்ளது.
இந்த எதிர்பாராத விபத்தில், சம்பவ இடத்திலேயே 3 பெண்கள் பலியாகியுள்ளனர். மேலும் 3 பேர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்துள்ளனர்.
மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும், இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த 33 பேர் கடப்பா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ad

ad