78 தமிழக மீனவர்களை விடுவிக்க ராஜபக்சே உத்தரவு
இலங்கையில் உள்ள 78 தமிழக மீனவர்களை விடுவிக்க, இலங்கை அதிபர் ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார். நல்லெண்ண நடவடிக்கையாக மீனவர்களை விடுவிப்பதாக டிவிட்டரில் ராஜபக்சே தெரிவித்துள்ளார். மேலும் இலங்கை மீனவர்கள் 13
பேரை இந்திய அரசு விடுவித்ததை வரவேற்பதாகவும், எஞ்சிய இலங்கை மீனவர்களையும் இந்தியா விடுவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
ராஜபக்சே உத்தரவையடுத்து செவ்வாய்க்கிழமை காலை மீனவர்கள் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.