புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஜூன், 2014

மலேசியாவில் இருந்து ஈழத்தமிழரை  திருப்பி அனுப்புவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெர்மனி தூதரகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் 

ஈழத்தமிழர்களைத் திருப்பி அனுப்புவதைக் கண்டித்து Berlin: Frankfurt மலேசியத்தூதரகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம்
மலேசியாவிலிருந்து ஏதிலிகளாகத் தஞ்சமடைந்த ஈழத்தமிழர்களைத் திருப்பிச் சிறிலங்கா இனவாத அரசிடம் ஓப்படைப்பதைக் கண்டித்து யேர்மனி பேர்லின் நகரத்திலும், பிராங்போட் நகரத்திலும் அமைந்துள்ள மலேசியத் தூதரகங்களின் முன்பாக ஆர்ப்பாட்டம் ஓன்றை ஈழத்தமிழர் மக்களவை ஏற்பாடு செய்திருக்கின்றது. மிகக்குறுகிய காலத்திற்குள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்துத் தமிழீழ மக்களையும் கலந்துகொள்ளுமாறு ஈழத்தமிழர் மக்களவை உரிமையுடன் அழைக்கின்றது.
Malaysian Embassy
Platz der Einheit 1
Frankfurt am Main
காலம்: 02.06.14 திங்கட்கிழமை
நேரம்: 15.30
Klingelhoefer Str. 6 10785 Berlin
காலம்: 3.6.20104 செவ்வாய்க்கிழமை
நேரம்: 16:30

ad

ad