புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜூன், 2014


மதுரை அருகே பொறியியல் மாணவன் எரித்துக் கொலை

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி.கல்லுப்பட்டியை அடுத்துள்ளது எம்.சுப்புலாபுரம். இப்பகுதியில் உள்ள செல்போன் டவர்
அருகே பாதி எரிந்த நிலையில் ஆண் பிணம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர்.
விசாரணையில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தவர் எம்.சுப்புலாபுரத்தைச் சேர்ந்த போத்திராஜா மகன் ராஜ்குமார்(21) என தெரியவந்தது. இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2–ம் ஆண்டு படித்து வந்தார். மாணவர் ராஜ்குமார் இன்று அதிகாலைதான் வீட்டில் இருந்து வெளியே சென்றாராம். ஆனால் அதற்குள் அவர் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாணவன் எரித்துக்கொலை செய்யப்பட்டாரா? அல்லது தீவைத்து தற்கொலை செய்து கொண்டாரா?  என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ad

ad