புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜூன், 2014


நவீன துப்பாக்கிகளை வழங்குமாறு வடமாகாண சபை உறுப்பினர்கள் வேண்டுகோள்
தனது பாதுகாப்பிற்காக துப்பாக்கி ஒன்றினைக் கொள்வனவு செய்யவுள்ளதாக வடக்கு மாகாண உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண சபையின் 11வது அமர்வு இன்று கைதடியில் உள்ள மாகாண சபை கட்டடத்தில் இடம்பெற்றது.
வடமாகாண சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணையினை ஆதரித்து உரையாற்றும் போது, தனக்கு வழங்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு மீளவும் பெறப்பட்டதையடுத்து, தனது பாதுகாப்பிற்காக துப்பாக்கியை வாங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நவீன துப்பாக்கிகளை வழங்குமாறு வடமாகாண சபை உறுப்பினர்கள் வேண்டுகோள்
வடமாகாணசபை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு மீளப்பெறப்பட்டிருக்கும் நிலையில் எமக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்க முடியாது என்றால் எமக்கு நவீன துப்பாக்கிகளை வழங்குங்கள் என வடமாகாண சபை உறுப்பினர்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாகாணசபையின் 11வது அமர்வு இன்றைய தினம் நடைபெற்றிருந்த போதே மாகாணசபை உறுப்பினர்கள் குறித்த கோரிக்கையினை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும், பேரவை தலைவர் சி.வி.கே.சிவஞானத்திற்கும் விடுத்திருக்கின்றனர்.
மாகாணசபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன் மற்றும், கஜதீபன், சுகிர்தன் ஆகியோருக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு அமைச்சரவை பாதுகாப்பு பிரிவு பாதுகாவலர்கள் வழங்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் குறித்த பாதுகாப்புக்கள் அனைத்தும் மீளப்பெறப்பட்டிருக்கும் நிலையில் முதலமைச்சருக்கான பாதுகாப்பு மட்டும் தொடர்ந்தும் நீட்டிக்கப்பட்டிருக்கின்றது.
இந்நிலையில் இன்றைய அமர்வின்போது தாம் மிகுந்த அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில், அரசியல் பணியினை தொடர்ந்து கொண்டிருப்பதாக பாதுகாப்பு நீக்கப்பட்டிருக்கும் மாகாணசபை உறுப்பினர்கள் தெரிவித்ததுடன்,
எம்மோடு மாகாணசபையில் இருக்கும் சிங்கள மாகாணசபை உறுப்பினர்களுக்கும், இலங்கையில் உள்ள பல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், பாதுகாப்பு வழங்கப்படுகின்ற நிலையில் எதற்காக எமக்கு பாதுகாப்பு வழங்க முடியவில்லை என கேள்வி எழுப்பியுள்ளனர்.
அவ்வாறு பாதுகாப்பு வழங்க முடியாவிட்டால் நவீன துப்பாக்கிகளையும், அவற்றைக் கையாள்வதற்கான பயிற்சிகளையும் எங்களுக்கு வழங்குங்கள் என கேட்டிருக்கின்றனர்.
மேலும் அனந்தி சசிரதன் உரையாற்றும்போது பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ள நிலையில் தனக்கோ, தன் பிள்ளைகளுக்கோ அதனால் பாதிப்பு உண்டாகுமானால் அதற்கு வடக்கு மாகாணசபை பொறுப்பேற்க வேண்டும் எனவும் சபையில் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
இன்றைய சபை அமர்வில் செங்கோலை வெளியே கொண்டுசெல்ல விடாமல் சிவாஜிலிங்கம் போராட்டம்
சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக கூறி வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இன்றைய தினம் வடமாகாணசபை சபா மண்டபத்தில் நிலத்தில் உட்கார்ந்து செங்கோலை வெளியே கொண்டு செல்ல விடாமல் எதிர்ப்பு போராட்டம் நடத்தியுள்ளார்.
இன்றைய தினம் நடைபெற்ற வடக்கு மாகாணசபையின் 11வது அமர்வில் நிறைவேற்றப்படுவதற்காக சிவாஜிலிங்கம் 3தீர்மானங்களை கடந்த 12ம் திகதி பேரவைச் செயலகத்திற்கு அனுப்பி வைத்திருந்துள் ளதுடன், பேரவை தலைவருக்கும் அனுப்பியுள்ளார். ஆனால் இன்றைய அமர்வில் அவருடைய பிரேரணைகள் சபைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.
இந்நிலையில் தன்னுடைய பிரேரணைகள் எதற்காக எடுத்துக் கொள்ளப்படவில்லை என கேள்வி எழுப்பிய சிவாஜிலிங்கம், கூட்டம் நிறைவடைந்ததும், செங்கோலை வெளியே கொண்டுசெல்ல விடாமல் சபா மண்டபத்தின் பிரதான வாயிலில் நிலத்தில் உட்கார்ந்து தன்னுடைய சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக எதிர்ப்பு போராட்டம் நடத்தினார்.
இதன் பின்னர் சிவாஜிலிங்கம் பிரேரணையாக கொண்டுவந்திருக்கும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக் குழு தொடர்பான விடயங்கள் தேசிய அரசியலில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் கையாளப்படுகின்றது.
மேலும் இந்த விடயங்கள் தொடர்பாக ஆராய்வதற்கும் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் கூட்டமைப்பின் தலைமை 8பேர் கொண்ட குழுவினை நியமித்துள்ளது.
எனவே அவர்களுடைய முடிவுகள் கூறப்படும் வரையில் தீர்மானம் மாகாணசபையில் நிறைவேற்ற முடியாது,
ஒரு கட்சி என்ற வகையில் கட்சியின் தலைமைக்கு மதிப்பளிக்கவேண்டும், அவர்களுடைய தீர்மானத்திறகு கட்டுப்படவேண்டும்.
மேலும் தேசிய அரசியலில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் இராஜதந்திர ரீதியாக கையாளும் விடயங்களை, குறிப்பாக சர்வதேச விடயங்களை மாகாணசபையில் தீர்மானமாக நிறைவேற்றுவது அவர்களுடைய அந்த தேசியப் பணிக்கு இடையூறாக இருப்பதாக சபையில் பேரவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மற்றும் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் சுட்டிக்காட்டினர்.
இதனையடுத்து தன்னுடைய எதிர்ப்பு போராட்டத்தைக் கைவிட்ட சிவாஜிலிங்கம் எழுந்து ஆசனத்தில் அமைதியாக அமர்ந்து கொண்டார். அதன் பின்னர் எவ்விதமான குழப்பங்களும் உண்டாகியிருக்கவில் லை.

ad

ad