புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஜூன், 2014


களியக்காவிளையில் ராதா கிருஸ்ணனுக்கு அமோக வரவேற்பு 
களியக்காவிளையில் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பா.ஜ.க.வினர் உற்சாக வரவேற்பு
கன்னியாகுமரி தொகுதியில் பாரதீய ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய கனரக தொழிற்சாலைகள்
மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் இணை மந்திரியாக பதவியேற்றார்.

மத்திய மந்திரியாக பதவியேற்ற பிறகு அவர் முதன்முறையாக இன்று தனது சொந்த ஊரான குமரி மாவட்டம் வந்தார்.
டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்த அவருக்கு கேரள மாநில பாரதீய ஜனதாவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு குமரி மாவட்டம் வந்தார். மாவட்ட எல்லையான களியக்காவிளையில் பாரதீய ஜனதாவினர் திரண்டு பொன்.ராதாகிருஷ்ணனுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதிர்வேட்டுகள், செண்டை மேளம் முழங்க பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஆளுயர மாலை அணிவித்து வரவேற்றனர். அங்கு திரண்டு இருந்த பாரதீய ஜனதாவினருக்கும், பொதுமக்களுக்கும் அவர் நன்றி தெரிவித்து பேசினார்.

ad

ad