புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜூன், 2014


ஐ.நா உதவிச்செயலர் ஒஸ்கார் பெர்னாண்டஸ்  நாளை இலங்கைக்கு விஜயம்
ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ஒஸ்கார் பெர்னான்டஸ் தரங்கோ நாளை இலங்கைக்கு விஜயம்  மேற்கொள்ளவுள்ளார் என தெரியவருகிறது
இந்தப் பயணம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதெனத் தெரியவருகிறது.
எனினும், இலங்கை அரசாங்கத்துடன் பேச்சு நடத்துவதற்காக வரும் இவர், அளுத்கம, பேருவளை வன்முறைகள் தொடர்பாக கேள்வி எழுப்புவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
ஐ.நா விசாரணைக் குழுவுக்கு அனுமதி அளிப்பதா என்று இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று முதல் நடந்து வரும் விவாதத்தின் முடிவில் இன்று பிற்பகல் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
இந்தப் பின்னணியில், ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச்செயலர் ஒஸ்கார் பெர்னாண்டஸ் தரங்கோ, விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ad

ad