தமிழ் தேசிய கூட்டமைப்பு நடாத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மனோ கணேசனின் கட்சி ஆதரவு
அளுத்கம,பேருவளை, தர்கா நகரில் வாழும் முஸ்லீம்கள் மீதான தாக்குதலை கண்டித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு யாழ் நகரில் ஒழுங்கு செய்திருக்கின்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஜனநாயக மக்கள் முன்ணணி பூரண ஆதரவு வழங்குவதாக அக்கட்சியின் ஊடகச் செயலாளர் சி. பாஸ்கரா தெரிவித்தார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
சிறுபான்மையினர் மீதான இனவாத தாக்குதல்கள் காலம் காலமாக வெற்றிகரமாக இனவாதிகளால் முன்னெடுக்கப்பட்டு தமிழர் மீதான ஒட்டுமொத்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் நடத்தி வெற்றி கண்ட இனவாதம் சகோதர முஸ்லீம் மக்கள் மீதும் நடாத்தப்பட்டதை வன்மையாகக் கண்டித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒழுங்கு செய்துள்ள இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு எமது தார்மீக ஆதரவை வழங்துவதோடு சகல கட்சிகளும், அமைப்புகளும், மக்களும் ஒன்று திரண்டு ஆதரவை தெரிவிக்க வேண்டும் எனவும் பாஸ்கரா தெரிவித்தார்.