புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜூன், 2014


வருமான வரித்துறை வழக்கு! ஜெயலலிதா, சசிகலா நேரில் ஆஜராக எழும்பூர் கோர்ட் உத்தரவு!
வருமான வரி மோசடி செய்ததாக வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று (திங்கள்கிழமை) ஆஜராகவில்லை. 


பல்வேறு அலுவலால் ஜெயலலிதா ஆஜராக இயலவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் சசிகலா ஆஜராக இயலவில்லை என்று நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.


வழக்கில் ஆஜராவிதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி ஜெயலலிதா தரப்பில் புதிய மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஜெயலலிதாவின் புதிய மனுவுக்கு வருமான வரித்துறை சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 
இதையடுத்து வழக்கின் விசாரணை பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகலில் வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கில் ஆஜராவிதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது. 
வருமான வரி வழக்கில் ஜெயலலிதா, சசிகலா ஆகிய இருவரும் வரும் ஜூன் 30ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

ad

ad