புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜூன், 2014


தோழமை கட்சிகளுடன் திமுக கூட்டணி: தேர்தல் ஆணையத்துடன் அதிமுக கூட்டணி: மு.க.ஸ்டாலின் பேச்சு

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினின் நேர்முக உதவியாளர் அரிகிருஷ்ணன் மகள் திருமணம், முரசொலி செல்வம் முன்னிலையில் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர்
அரங்கில் திங்கள்கிழமை காலை நடைபெற்றது. விழாவுக்கு தலைமை ஏற்று பேசிய மு.க.ஸ்டாலின்,

அதிமுக தனித்து நின்று வெற்றி பெற்றிருக்கிறது. திமுக கூட்டணி அமைத்து தோல்வி அடைந்திருக்கிறது என்று திட்டமிட்டு சில மீடியாக்களில், பத்திரிகைகளில் தொடர்ந்து இன்றைக்கும் செய்தி வந்துகொண்டிருக்கிறது. அது உண்மையல்ல. நாம் தோழமை கட்சிகளோடு கூட்டணி வைத்ததது உண்மைதான். 
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக தேர்தல் ஆணைத்துடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது. தேர்தலின்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும், வாக்காளர்களுக்கு தலா ரூபாய் 200 பணம் வழங்கியதுமே இதற்கு சான்று. தேர்தலில் பணம் விநியோகிக்கப்பட்டதை தேர்தல் அதிகாரியே ஒப்புக்கொண்டபோதும் இதுதொடர்பாக ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா. ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளிய அதிகாரிகள் நாட்டு மக்களுக்கு பதில் சொல்லும் காலம் விரைவில் வரும். இவ்வாறு பேசினார்.

ad

ad