புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜூன், 2014


முள்ளிவாய்க்கால் எலும்புக்கூடுகளை தோண்டப் போகிறாராம் நவநீதம்பிள்ளை!

Navi_Pillay
இலங்கையில் போர் நடந்த காலத்தில் சடலங்கள் புதைக்கப்பட்ட மனித புதைகுழிகளை தோண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர்
நவநீதம்பிள்ளை முயற்சித்து வருவதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. நந்திக்கடல் மற்றும் வெள்ளமுள்ளிவாய்க்கால் ஆகிய இடங்களில் மனித புதைகுழிகளை தோண்டி எடுத்து விசாரணை நடத்தும் முனைப்புக்களில் நவநீதம்பிள்ளை ஈடுபட்டுள்ளார். குறித்த இடங்களில் காணப்படும் மனித புதைகுழிகளை தோண்டும் நோக்கில் பிரதிநிதிகள் குழுவொன்றை இலக்கைக்கு அனுப்பி வைக்க நவநீதம்பிள்ளை முயற்சித்து வருகின்றார்.
இந்த நோக்கத்திற்காகவே விசாரணைக்குழுவில் இரசாயன பகுப்பாய்பு நிபுணர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.போர் இடம்பெற்ற பகுதிகளில் ஆயிரக்கணக்கான மனித எலும்புக்கூடுகள் காணப்படுவதாக புலி ஆதரவாளர்கள் நவநீதம்பிள்ளையிடம் முறைப்பாடு செய்துள்ளனர். நவநீதம்பிள்ளை மிகவும் திட்டமிட்ட வகையில் பிரதிநிகளை நியமித்துள்ளார். வன்னியில் மனித புதைகுழிகளை தோண்டி, எலும்புக்கூடுகள் தொடர்பில் விசாரணை நடத்தவே நவநீதம்பிள்ளை முயற்சித்து வருகின்றார் என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ad

ad