புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜூன், 2014


இளம்பெண்ணை வைத்து நிர்வாண பூஜை நடத்திய ஜெ.,பேரவை செயலாளர் கைது
ராமநாதபுரம் அருகே உள்ள தேவிபட்டினம் பகுதியில் கடலுக்கு நடுவே உள்ள நவகிரகங்களை வழிபட ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம்.



கடந்த 14ம் தேதி தேவிபட்டினம் வந்த திருப்பூர் அருகே உள்ள கீழசேவல்பட்டியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர், தங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு குழந்தை பிறந்த போது அதன் உடலில் கொடி சுற்றி பிறந்தது என்றும், கொடி சுற்றி பிறந்ததால் அந்த குழந்தைக்கு ஆபத்து ஏற்படலாம் என்று எண்ணிய அவர்கள் ஜோதிடர் ஒருவரிடம் கூறியுள்ளனர். அந்த ஜோதிடர் தேவிபட்டினத்தில் உள்ள நவகிரகங்களை வழிபட்டால் தோஷம் விலகும் என கூறியுள்ளார்.
இதையடுத்து தோஷம் கழிப்பதற்காக தேவிபட்டினம் வந்த இவர்கள், பக்தர்களுக்கு வழிகாட்டும் கற்பூர சுந்தரம் என்பவரை சந்தித்துள்ளனர். கற்பூர சுந்தரம்,  தேவிபட்டினத்தில் மாந்திரீகம் மற்றும் தோஷம் கழிப்பு செய்து வரும் தேவிபட்டினம் நகர ஜெயலலிதா பேரவை செயலாளரான கணேசமூர்த்தி என்பவரிடம் இவர்களை அறிமுகம் செய்துள்ளார்.
கடந்த 14ம் தேதி இரவு தோஷம் கழிக்கவேண்டிய இளம் பெண்ணை மட்டும் நவகிரகங்கள் இருக்கும் கடல் பகுதிக்கு கணேசமூர்த்தி அழைத்து சென்றுள்ளார். அங்கு அந்த பெண்ணை முழு நிர்வாண நிலையில் நிற்க வைத்து பூஜைகள் நடத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து பூஜை என்ற பெயரில் நடந்த சம்பவத்தை தனது குடும்பத்தினரிடம் கூறியுள்ளார்.
இதனால் கோபமடைந்த அவர்கள் கற்பூரசுந்தரத்தை சந்தித்து முறையிட்டுள்ளனர். இது தொடர்பாக கற்பூரசுந்தரம் தேவிபட்டினம் காவல்நிலையத்தில் புகார் செய்தார். பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்திய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து போலி சாமியாரான கணேசமூர்த்தியை கைது செய்தனர்.

ad

ad