புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜூன், 2014

நாங்கள் பொறுமையிழந்தால் பௌத்தர்கள் தாங்க மாட்டார்கள்; எம்.எம்.நிவாகிர் 
நிலம் வேண்டும் என்றால் அந்த நிலங்களை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்  எங்கள் மீது தேவையில்லாது கை வைத்து மோதலை தூண்டி விடாதீர்கள்.
நிட்சயமாக நீங்கள் தூண்டினால் நாங்களும் தூண்டப்படுவோம். அவ்வாறு தூண்டப்பட்டால் உங்களுடைய நிலை மிகவும் மோசமாக மாறிவிடும் என தகவல் வழிகாட்டல் மையத்தின் செயலாளர் எம்.எம்.நிவாகிர் தெரிவித்தார்.

அளுத்கம, பேருவளை, தர்காநகரில் வாழும் முஸ்லிம்கள் மீதான தாக்குதலைக் கண்டித்துத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் இன்று யாழ் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக கண்டனப் போராட்டத்தை மேற்கொண்டது. அதில்  உரையாற்றும்போதே அவர்  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில் ,

இன்று நடக்கும் இக் கூட்டமானது இன அடக்கு முறைக்கு எதிரான ஒரு கூட்டமாகும். இனங்கள் மீது வன்முறையினை தூண்டிவிடும் தேரரான பொதுபலசேனாவின் செயலாளரின் கொடூர செயற்பாடு இன்று அளுத்கமவில் அரங்கேறியுள்ளது.

இன்று அளுத்கமயில் நாளை மாவனல்லையில் நாளை மறுதினம் பதுளையில்  என்று இவ்வாறு அரங்கேற்றிச் செல்வார்கள் இதனை நாம் பார்த்துக் கொண்டு இருப்பதற்கு நாங்கள் கோளைகள் அல்ல.

நாங்கள் அல்லா மீது விசுவாசம் கொண்டவர்கள் அந்த விசுவாசத்தினால் எமது உயிரைக் கூட இறைவனுக்கு வழங்க நாம் தயாராக உள்ளோம் எமது உயிரை துச்சமாக மதிக்கின்றோம்.

எனினும் உங்களது உலக ஆசைக்காக நீங்கள் செய்யும்  ஒவ்வொரு செயலும் மிகவும் பாரதூரமாக உள்ளது. இந்தப் பூமியில் நிலம் வேண்டும் என்றால் அந்த நிலங்களை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் .

ஆனால் நீங்கள்  எங்கள் மீது தேவையில்லாத முறையில் கை வைத்து மோதலை தூண்டி விடாதீர்கள். நிட்சயமாக நீங்கள் தூண்டினால் நாங்களும் தூண்டப்படுவோம். அவ்வாறு தூண்டப்பட்டால் உங்களுடைய நிலை மிகவும் மோசமாக மாறிவிடும்.

எனினும் இவ்வாறான சம்பவங்களுக்கு இவர்களுக்கு யார் உதவி செய்கின்றார்கள் என்றால் அரச கூலிப்படைகள் தான் உதவி செய்கின்றனர். இவர்கள் இன்றே இந்த நாடகத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இல்லையேல் இது மேலும் மேலும் அகிம்சை வழியில் எமது போராட்டம் தொடரும் .எனினும் நாம் இறைவன் கற்றுத் தந்த பொறுமையுடன் இருப்போம்,  பொறுமையினை நீங்கள் சோதித்தால் நாங்கள் பொறுமையை மீறிவிட்டால் தாங்க மாட்டீர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் சிங்களவரிடம் உண்மையான உள ரீதியான ஒரு மார்க்கம் கிடையாது என்பதை பௌத்தர்கள்  தெரிந்து கொள்ளவேண்டும் . நீங்கள் உங்கள் மதரீதியில் ஒன்றைக் கூறியும் மக்களுக்கு வேறு ஒன்றையும் செய்கின்றீர்கள் .

அமெரிக்காவிற்கு சென்றால் மாட்டு இறைச்சி சாப்பிடுகின்றீர்கள் இங்கு ஹலால் கூடாது என்கிறீர்கள். இவ்வாறு ஹலால் பர்தா என ஆரம்பித்துள்ளீர்கள். முஸ்லிம் பெண்களுடைய ஆடைகளையும் தடை செய்கின்றீர்கள்.

அவர்கள் அவ்வாறு செய்வதில் உங்களுக்கு என்ன தடை இருக்கின்றது.  நாங்கள் அந்த உடைகளுக்கு அனுமதி வழங்கியிருக்கும் போது அதனை தடை செய்ய நீங்கள்  யார்? உங்களுக்கு யார் இந்த உரிமைகளைத் தந்தது?

நாமும் இந்த நாட்டு பிரஜைகள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். தீய செயல்களையும் அடாவத் தனங்களையும் கைவிட வேண்டும் என்றார்.

ad

ad