இலங்கைத் தமிழர்களுக்காக விஜயகாந்த் மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை
இலங்கையில் தமிழர்களின் நிரந்தர தீர்வுக்காக இந்திய மத்திய அரசாங்கம் முனைப்பை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவரும் பாரதீய ஜனதா கட்சியின் பங்காளியுமான நடிகர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் இன்று இடம்பெற்ற கட்சிக்கூட்டத்தில் இந்தக்கோரிக்கைகளை விஜயகாந்த் முன்வைத்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
இந்திய மீனவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் நிறுத்தப்பட வேண்டும்.
இந்தியா, இலங்கையை நட்பு நாடாகவே கருதுகிறது. எனினும் இலங்கை அதனை மதிப்பதாக தெரியவில்லை.
இதன்காரணமாகவே தமிழக மீனவர்கள் இலங்கையின் கடற்படையினரால் தொடர்ந்தும் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
இந்தநிலையில், தமிழக மீனவர்களை காப்பதற்கு இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்திய மீனவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் நிறுத்தப்பட வேண்டும்.
இந்தியா, இலங்கையை நட்பு நாடாகவே கருதுகிறது. எனினும் இலங்கை அதனை மதிப்பதாக தெரியவில்லை.
இதன்காரணமாகவே தமிழக மீனவர்கள் இலங்கையின் கடற்படையினரால் தொடர்ந்தும் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
இந்தநிலையில், தமிழக மீனவர்களை காப்பதற்கு இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.