புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜூன், 2014

சுரங்கப்பகுதிகளை மீளவனமாக்கலைத் தவிர வேறு நடவடிக்கைகளுக்கு அனுமதிக்க வேண்டாம்; சுற்றுச்சூழல் அமைச்சர் 
அனுமதிக்கப்பட்ட ஆழத்திற்கு மேலதிகமாக பன்றிவெட்டிப் பகுதியில் கருங்கல் அகழுவதனைத் தடுத்து நிறுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்கினேஸ்வரன் வடமாகாண விவசாய அமைச்சருக்கு உத்தரவிட்டுள்ளார்.


வடக்குமாகாண முதலமைச்சர் தலைமையில் விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் , கல்வி அமைச்சர் குருகுலராஜா , துணுக்காய் பிரதேச செயலர் குணபாலன், மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் சி.திருவாகரன் மற்றும் துணுக்காய் பிரதேசசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட குழுவினர் நேற்று முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் மற்றும் மல்லாவி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பகுதி மக்கள் சந்திப்புக்காக சென்றிருந்தனர்.

அதன்போதே துணுக்காய் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்டன்றிவெட்டிப் பகுதியில் அமைந்துள்ள கருங்கற் சுரங்கங்களை பார்வையிட்டனர்.

புவிச்சரிதவியல் அளவை சுரங்கப்பணியகத்தால் 12 மீற்றர்கள் ஆழத்துக்கு மாத்திரமே கல் அகழலாம் என அனுமதிக்கப்பட்டபோதும், பல இடங்களில் 16 மீற்றர்கள் ஆழத்துக்கும் அதிகமாக கல் உடைக்கப்பட்டுள்ளது.

இதனால் எதிர்காலத்தில் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளமையினால் அனுமதிக்கப்பட்ட ஆழத்துக்கு மேலதிகமாக அகழப்படுவதைத் தடுத்து நிறுத்த உடன் ஆவன செய்யுமாறு முதலமைச்சர் சுற்றுச்சூழல் அமைச்சரிடம் கேட்டுக்கொண்டார்.

மேலும், வளங்களைப் பயன்படுத்தி கொள்ளை இலாபம் ஈட்டும் தென் இலங்கை நிறுவனங்கள், தமது வருவாயில் எவ்வளவு தொகையை வடக்கின் அபிவிருத்திக்குப் பயன்படுத்தியுள்ளது என்பது தொடர்பான விபரங்களைத் தமக்குத் தருமாறும் பொ.ஐங்கரநேசன் பிரதேசச் செயலரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன் கல்லுடைக்கும் நிறுவனங்கள், கல் உடைப்பதால் ஏற்படும் பாரிய குழிகளை நிரப்பி அப்பிரதேசத்தில் மரங்களை வளர்த்து மீளவனமாக்கலை மேற்கொள்ளவேண்டும் என்பதே வழமையான நடைமுறையாகும். எனினும் இயன்ற வரையில் கற்களைத் தோண்டியெடுத்துக் காசாக்கும் நிறுவனங்கள் சுரங்கங்களை மீளவும் நிரப்பி மூடுவதற்குச் செலவழிக்க விரும்புவதில்லை.

மேற்குறிப்பிட்ட சுரங்கங்களிலும், உள்ளே சேர்ந்திருக்கும் தண்ணீரைச் சாட்டாக வைத்து அதில் மீன்குஞ்சுகளை விட்டு வளர்க்கவும் அல்லது கழிவுகளைக் கொட்டும் இடமாகப் பயன்படுத்தவுமே கல் அகழும் நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

ஆனால், இரண்டுமே அப்பிரதேசத்தின் சுற்றுச்சூழலை மோசமாகப் பாதிக்கும் என சுட்டிக்காட்டிய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் துணுக்காய் பிரதேச செயலர் சி.குணபாலனிடம் சுரங்கப்பகுதிகளில் மீளவனமாக்கலைத் தவிர வேறு நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்க வேண்டாம் எனவும் பணித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.






 
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=754803137419767689#sthash.3ZhtO4tZ.dpuf

ad

ad