புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஜூன், 2014


ஹக்கீம் அரசிலிருந்து அவராக வெளியேறினால் நல்லது! இல்லையேல் நாம் வெளியேற்றுவோம்!- அமைச்சர் சம்பிக்க
ஹக்கீம் வெட்கம் இல்லாதவர். அவரை யாரும் அரசாங்கத்தில் இருக்க வேண்டும் என வலியுறுத்தவில்லை. அரசாங்கத்தில் இருந்து அவராக வெளியேறினால்
அவருக்கே சிறந்தது. இல்லையேல் நாம் வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்படலாம் என ஜாதிக ஹெல உறு­ம­யவின் செய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார்.

நாட்டில் சிங்­க­ள­வர்­க­ளுக்கு எதி­ரான மிகப்­பெ­ரிய கிளர்ச்சி விரைவில் உரு­வாக்­கப்­ப­ட­வுள்­ளது. ஜிஹாத் தீவி­ர­வா­தத்­திற்கு எதி­ராக போராட சிங்­க­ள­வர்கள் தயா­ரா­க­வுள்­ளனர். நாட்டில் தமிழ்த் தீவி­ர­வா­திகள் நல்­ல­தொரு பாடத்­தினை கற்­றுக்­கொண்­டுள்­ளனர். முஸ்­லிம்­களும் எம்­மிடம் பாடம் கற்­றுக்­கொள்ள தயா­ரா­கின்­றனர். அவர்­க­ளுக்கும் பாடம் கற்­பித்­துக்­கொ­டுக்க சிங்­க­ள­வர்கள் தயா­ரா­கவே உள்­ளனர் என்றும்  அவர் தெரி­வித்தார்.
ஹர்த்­தாலை அனுஷ்­டித்து முஸ்­லிம்­களின் பலத்தைக் காட்­டு­வதால் சிங்­க­ள­வர்கள் அஞ்சப் போவ­தில்லை. முஸ்­லிம்கள் சட்­டத்தை கையில் எடுத்தால் சிங்­க­ள­வர்­களும் சட்­டத்தை கையில் எடுக்க வேண்டும். முஸ்­லிம்­க­ளுக்கு அடங்­கிப்­போக நாம் கோழைகள் இல்லை என்றும் அவர் கூறினார்.
ஜாதிக ஹெல உறு­மய கட்­சி­யினால் நேற்று ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் குறிப்­பி­டு­கையில்,
 நாட்டில் சிங்­கள மக்கள் பாதிக்­கப்­பட்­ட­மைக்கும் அவர்­களின் உரி­மைகள் பறிக்­கப்­பட்­ட­மைக்கும் எவரும் குரல் கொடுக்­க­வில்லை. ஆனால், முஸ்­லிம்கள் தாக்­கப்­பட்­ட­தாக குறிப்­பிட்டு ஊட­கங்­களும் சர்­வ­தே­சமும் அலறிக் கொண்­டி­ருக்­கின்­றது.
அளுத்­க­மவில் போயா தினத்­தன்று பொது பல­சேனா அமைப்­பினர் கல­கத்தை ஏற்­ப­டுத்­தி­ய­தாக குற்றம் சுமத்­து­கின்­றனர். இது பொது பல­சேனா ஏற்­பாடு செய்த கூட்­ட­மில்லை. அனைத்து பௌத்த அமைப்­பு­களும் ஒன்­றி­ணைந்து ஏற்­பாடு செய்த பொசன் தின பூசை வழி­பாடு. இதில் பொது பல­சேனா அமைப்பு கலந்து கொண்­ட­மைக்­காக அவர்­களை குற்றம் சுமத்­து­வது எவ்­வி­தத்­திலும் நியா­ய­மில்லை.
கடந்த இரண்டு கிழ­மைக்கு முன்னர் முஸ்­லிம்­களால் தாக்­கப்­பட்ட பௌத்த மத­குரு தொடர்பில் அதி­ருப்­தியை வெளிப்­ப­டுத்தும் வகை­யி­லேயே இதில் பலர் கலந்து கொண்­டி­ருந்­தனர். எல்­லாரும் அளுத்­கம சம்­பவம் தொடர்பில் பேசு­கின்­றனர்.
ஆனால், அளுத்­க­மவில் இருந்து இரண்டு கிலோ மீற்றர் தூரத்தில் தர்கா நகரில் மூவா­யி­ரத்­திற்கும் அதி­க­மான முஸ்லிம் இன­வா­திகள் ஆயு­தங்­க­ளுடன் சிங்­க­ள­வர்­களைத் தாக்­கி­யுள்­ளனர். வீடு­க­ளையும் கடை­க­ளையும் உடைத்து சேதப்­ப­டுத்­தி­யுள்­ளனர். இது எவ­ரது பார்­வை­யிலும் பட­வில்லை. உண்­மை­யி­லேயே பிரச்­சினை ஏற்­பட்­டது தர்கா நக­ரி­லேயே. முஸ்லிம் இன­வா­திகள் பௌத்­தர்கள் மீது தாக்­குதல் நடத்­தினர். இதன்­போது பொலிஸார் வேடிக்கை பார்த்­துக் ­கொண்­டி­ருந்­தனர்.
முஸ்­லிம்கள் செய்த தவ­று­களை மறந்து சிங்­கள மக்கள் மீது அனைத்து பழி­யையும் சுமத்­தி­விட்டு இன்று இவர்கள் அப்­பா­விகள் போல் நடிக்­கின்­றனர். தம்மை நியா­யப்­ப­டுத்த முயற்­சிக்­கின்­றனர். உண்­மை­யி­லேயே இந்தப் பிரச்­சினை ஏற்­பட முஸ்லிம் மத­வா­தி­களே காரணம்.
முஸ்­லிம்­க­ளுக்கு நாம் அஞ்­ச­மாட்டோம். இன்று ஹர்த்­தாலை அனுஷ்­டித்து முஸ்­லிம்­களின் பலத்தை நிரூ­பிப்­பதன் மூலம் சிங்­கள மக்­களை அச்­ச­ம­டையச் செய்­யலாம் என நினைக்­கின்­றனர். சிங்­கள மக்கள் எதற்கும் அஞ்சப் போவ­தில்லை. பள்­ளி­வா­சல்­க­ளிலும் வீடு­க­ளிலும் முஸ்லிம் மத­வா­தத்­தி­னையும் தீவி­ர­வா­தத்­தி­னையும் பரப்பி மக்­களை சிங்­க­ள­வர்­க­ளுக்கு எதி­ராக செயற்­பட வைக்­கவே ஜிஹாத் வாதிகள் முயற்­சிக்­கின்­றனர். இதற்கு ஒரு போதும் நாம் அஞ்­சப்­போ­வ­தில்லை.
இலங்­கைக்குள் அதி­க­ள­வி­லான முஸ்லிம் இன­வாத தீவி­ர­வா­திகள் உரு­வா­கி­விட்­டார்கள். இன்று முகப்­புத்­த­கத்தில் வெளிப்­ப­டை­யா­கவே சிங்­க­ள­வர்­க­ளுக்கு எதி­ரான கருத்­து­களை பரப்பி தமது தீவி­ர­வாத குழுக்­களின் எண்­ணிக்­கை­யினை பரப்­பு­கின்­றனர். இன்னும் 15 வரு­டத்தில் சிங்­கள இனம் அழிக்­கப்­படும், தலை­களை கொய்து எறிவோம் என முஸ்லிம் இன­வா­திகள் எழு­து­கின்­றனர்.
இது ஜிஹாத் தீவி­ர­வாதம் இல்­லையா? சிங்­கள நாட்டில் சிங்­க­ள­வர்­களை அழிக்க நினைப்­பது முஸ்லிம் தீவி­ர­வாதம் இல்­லையா? இதை ஏன் எந்­த­வொரு அமைச்­சரும் கண்டு கொள்­ள­வில்லை. எதிர்க்­கட்சி முஸ்லிம் தீவி­ர­வா­தி­களை பாது­காக்க நட­வ­டிக்கை எடுக்­கின்­றனர்.
இன்று ரணில் விக்­கி­ர­ம­சிங்க தமிழ், முஸ்லிம் வாக்­கு­களை நம்பி அவர்­களின் தீவி­ர­வா­தத்தை பாது­காத்து சர்­வ­தேச அளவில் பேசு­கின்றார். ஆனால், சிங்­கள வாக்­குகள் இன்றி எதிர்க்­கட்சி எதையும் செய்ய முடி­யாது. அதேபோல் இன்று நாட்டில் பிரச்­சினை உள்­ளது. அது நாட்டில் முஸ்லிம் தீவி­ர­வா­திகள் அமை­தியை கெடுக்­கின்­றமை. முஸ்­லிம்­களின் கொள்­கையும் உடையும் 1991 ல்தான் இங்கு பரப்­பப்­பட்­டது. இன்று முஸ்­லிம்­களின் சுதந்­திரம் பறிக்­கப்­பட்டு தீவி­ர­வாத கொள்கை பரப்­பப்­பட்­டுள்­ளது.

அர­சாங்கம் சட்­டத்தை இயற்­றி­யுள்­ளது. அனைத்து மக்­க­ளுக்­கா­க­வுமே. சிங்­கள, தமிழ் மக்­க­ளுக்கு ஒரு சட்­டமும் முஸ்­லிம்­க­ளுக்கு தனிச் சட்­டமும் செயற்­பட முடி­யாது. காத்­தான்­குடி, தர்­கா­நகர், பேரு­வளை, மாவ­னெல்­லயில் முஸ்­லிம்கள் தலைக்­க­வசம் அணிந்து மோட்டார் வாகனம் செலுத்­து­வ­தில்லை. முஸ்­லிம்கள் ஷரிஆ சட்­டப்­ப­டியே செயற்­ப­டு­கின்­றனர்.
தமது மதத்­தையும் தீவி­ர­வாத கொள்­கை­யையும் பரப்ப முஸ்­லிம்கள் சட்­டத்தை கையில் எடுத்தால் எமது நாட்­டையும் பௌத்த சிங்­கள மக்­க­ளையும் பாது­காக்க சிங்­கள மக்­களும் சட்­டத்தை கையில் எடுக்க வேண்டும். இன்று நாட்டில் தலிபான் நங்­கூரம் போடப்பட்டு வருகின்றது. சிங்கள, தமிழ் மக்களை இலக்கு வைத்து தலிபான் தீவிரவாதம் செயற்படுகின்றது.
ஹக்கீம் வெட்கம் இல்லாதவர். இதற்கு முஸ்லிம் அமைப்புகளும் அமைச்சர்களும் துணை போயுள்ளனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு தீவிரவாதக் கட்சி. இன்று ஹக்கீம் அரசாங்கத்தில் இருப்பது வெட்கமாக உள்ளதெனக் கூறுகின்றார். ஆனால், அவரை யாரும் அரசாங்கத்தில் இருக்க வேண்டும் என வலியுறுத்தவில்லை. உண்மையிலேயே ஹக்கீம் வெட்கம் இல்லாதவர்.
அன்று முஸ்லிம்களை விடுதலைப் புலிகள் விரட்டியபோது பிரபாகரனுடன் ஒப்பந்தம் செய்தது வெட்கப்படும் செயல் இல்லையா? இன்று அமைச்சுப் பதவியினை வகித்துக்கொண்டு சர்வதேச விசாரணையினைக் கூறுவது வெட்கமாக இல்லையா? அரசாங்கத்தில் இருந்து அவராக வெளியேறினால் அவருக்கே சிறந்தது. இல்லையேல் நாம் வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்படலாம் எனவும் அவர் 

ad

ad