புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜூன், 2014


சொத்துக்கணக்கு மற்றும் தொழில் விவரங்களை சமர்பிக்க அமைச்சர்களுக்கு பிரதமர் உத்தரவு
மத்திய அமைச்சர்கள் அனைவரும் இரண்டு மாதத்திற்குள் சொத்து மற்றும் தொழில் விவரங்களை சமர்பிக்க வேண்டும் என பிரதமர்
நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.

மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றதும் அமைச்சர்களுக்கு நடத்தை விதிமுறைகள் வகுக்கப்பட்டன. இதன்படி அமைச்சர்கள் யாரும் தங்களது உறவினர்களை அரசு சார்ந்த பொறுப்புகளுக்கு நியமிக்க கூடாது என பிரதமர் உத்தரவிட்டார்.

இந்நிலையில் அமைச்சர்கள் அனைவரும் தங்களின் சொத்து மற்றும் தொழில் விவரங்களை சமர்பிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் விவரம், பங்குகளின் விவரம், கையிருப்பில் இருக்கும் பணம் மற்றும் நகைகளின் விவரம் போன்றவற்றை இரண்டு மாதத்திற்குள் தெரிவிக்க வேண்டும் என அமைச்சர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

ad

ad