புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜூன், 2014


பரந்தனில் கோர விபத்து! இளைஞர்கள் இருவர் ஸ்தலத்தில் பலி! - மட்டு.பெரிய போரதீவில் இளைஞனின் சடலம் மீட்ப
வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்துக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற இளைஞர்கள் இருவர் பரந்தன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் இன்று நண்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
அடுத்தடுத்துச் சென்ற டிப்பர் வாகனங்கள் இரண்டை முந்திச்செல்ல முற்பட்டவேளை முன்னால் சென்ற டிப்பருடன் இவர்கள் ஓட்டிச் சென்ற மோட்டார்சைக்கிள் மோதியதில் இரு இளைஞர்களும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம், ராச வீதி, கோப்பாயைச் சேர்ந்த உதயராசா விதுசன் (வயது 21), சிவானந்தராசா ஜேமஸ் நெல்சன் (வயது 25) ஆகியோரே உயிரிழந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலங்கள் கிளிநொச்சி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. கிளிநொச்சிச் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மட்டு.பெரிய போரதீவில் இளைஞனின் சடலம் மீட்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய போரதீவுப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சென்ற பொலிஸார், நேற்று மாலை சடலத்தினை மீட்டுள்ளதாகவும் மீட்கப்பட்ட சடலம் இராசலிங்கம் சங்கரப்பிள்ளை (30வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பெரிய போரதீவு, மாணிக்கவாசகர் வீதியில் உள்ள குறித்த இளைஞனின் வீட்டில் இருந்தே சடலம் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இவர் எவ்வாறு உயிரிழந்தார் என்பது தொடர்பிலான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்த

ad

ad