புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜூன், 2014

பாராளுமன்றத்தில் இருக்கைகள் மாற்றம் :மோடிக்கு அடுத்து அத்வானி .தமிழில் பதவியேற்றார்  பொன்.ராதாகிருஷ்ணன்.மோடி, சோனியா பதவி ஏற்றனர்
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர்.  தேர்தலில் வெற்றி பெற்றோருக்கு சபாநாயகர் கமல்நாத் பதவி பிரமாணம் செய்துவைத்தார்.  



 மக்களவை உறுப்பினர்களாக நரேந்திரமோடி, அத்வானி, ராஜ்நாத்சிங் ஆகியோர் பதவி ஏற்றுக் கொண்டனர்.  மக்களவை உறுப்பினராக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியும் பதவி ஏற்றுக் கொண்டார். 
பாராளுமன்றத்தில் இருக்கைகள் மாற்றம் :மோடிக்கு அடுத்து அத்வானி 
மக்களவை உறுப்பினராக பாஜகவை சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன் பதவியேற்றார்.  அவர் மக்களவையில் தமிழில் பதவிப்பிரமணானம் எடுத்துக்கொண்டார்.
தேர்தலில் பா.ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் உட்காரும் இடவரிசையும் மாறியது.

16–வது பாராளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. தேர்தலில் பா.ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மை பெற்றதால் அக்கட்சியின் எம்.பி.க்கள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்து ஆளும் கட்சி வரிசைக்கு வந்துவிட்டனர். 1984–ம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக ஒரு கட்சி (பா.ஜனதா) தனித்து பெரும்பான்மை பெற்றிருப்பதால் ஆளும் கட்சி வரிசை நிறைந்து வழிந்தது. கட்சிகளின் எம்.பி.க்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப அவர்களுக்கு வரிசை மற்றும் இருக்கைகளும் நேற்று ஒதுக்கீடு செய்யப்பட்டன.

அதன்படி, பா.ஜனதாவின் மூத்த தலைவரான அத்வானிக்கு பாராளுமன்ற பா.ஜனதா தலைவரான (பிரதமர்) நரேந்திர மோடிக்கு அடுத்த இருக்கை ஒதுக்கப்பட்டு உள்ளது. இவர்களுக்கு அடுத்ததாக அதே முதல் வரிசையில் முரளி மனோகர் ஜோஷி, ராம்விலாஸ் பஸ்வான் (லோக் ஜனசக்தி தலைவர்), வெங்கையா நாயுடு, சுஷ்மா சுவராஜ், ராஜ்நாத் சிங் ஆகிய 5 முக்கிய தலைவர்களுக்கு இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
பா.ஜனதாவின் முன்னாள் தலைவர் நிதின் கட்காரி ஆளும் கட்சிக்குரிய பகுதியில் 2–வது வரிசையிலும், வருண்காந்தி பின்வரிசையிலும் இடம் பிடித்து இருந்தனர்.
எதிர்க்கட்சியினருக்கான ஒதுக்கீட்டின்படி, முதல் வரிசையில் பாராளுமன்ற காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, வீரப்ப மொய்லி, கே.எச்.முனியப்பா ஆகியோர் அமர்ந்து இருந்ததை காண முடிந்தது. இவர்களுக்கு பின்னால் 9–வது வரிசையில் ராகுல் காந்தி உட்கார்ந்து இருந்தார். அவருக்கு அருகில் அவரது நெருங்கிய நண்பர்களான அசரப்–உல் ஹக், சசிதரூர் ஆகியோருக்கும் இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தன.
எதிர்க்கட்சி தரப்பின் முன் வரிசையில், முலாயம் சிங் (சமாஜ்வாடி), சுதீப் பந்தோபாத்யா (திரிணாமுல் காங்கிரஸ்), அர்ஜூன் சரண் சேத்தி (பிஜூ ஜனதா தளம்), தம்பிதுரை (அ.தி.மு.க.) ஆகியோருக்கும் இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது.

ad

ad