புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜூன், 2014


இந்திய மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் நாளை மோடி கவனம் செலுத்தவுள்ளார்
இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுகின்றi மற்றும் கைது செய்யப்படுகின்றமை தொடர்பில் நாளையதினம் இந்திய பிரதமர் நரேந்திரமோடியின் கவனத்துக்கு கொண்டுவரப்படவுள்ளது.
பிரதமர் மோடியின் தலைமையில் நாளை நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் இந்த விடயம் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
இந்த கூட்டத்தின் போது மீனவர்கள் மீதான தாக்குதல்களையும் கைதுகளையும் நிறுத்தி,  அதற்கான நிரந்தர தீர்வு ஒன்று வழங்குவது குறித்து ஆராயப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதற்காக இன்றைய தினம் வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் இந்திய மத்திய அரசாங்கத்தின் அதிகாரிகளுடன் விசேட பேச்சுவார்த்தை ஒன்றையும் நடத்தியுள்ளார்.

ad

ad