புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஜூலை, 2014




காயம்-1


"எம்.ஜி.ஆர். சிவாஜி கமல் ரஜினி' என்கிற படத்தை தயாரித்து, இயக்கி வருகிறார் வனிதா விஜயகுமார். கடந்த வாரம் சென்னையை அடுத்த பல்லாவரம் பகுதியில் படப் பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருந் தது. காட்சிப்படி நிரோஷா ஓடிச்சென்று பஸ்ஸில் ஏறும் காட்சி.  இதில் தடுக்கி கீழே விழுந்துவிட்டார். காயம் பட்டதால் "சிகிச்சை யும், ஓய்வும் தேவை'யென நிரோஷா சொல்ல... "இந்த ஸீனை முடிச்சி குடுத்திட்டுதான் போகணும்' என வனிதா சொல்ல... இரு வருக்கும் இடையே கடுமையான வாய்த் தகராறு ஏற்பட்டிருக்கிறது.

"நான் விஜயகுமார் மக' என வனிதா கர்ஜிக்க... "நான் எம்.ஆர்.ராதா மக' என நிரோஷா பதிலுக்கு கர்ஜித்துவிட்டு கிளம்பிவிட் டாராம். வனிதா மீது நடிகர் சங்கத்தில் முறையிட்டி ருக்காராம் நிரோஷா.

காயம்-2


தன் மாஜி காதலரும், தொழிலதிபரும், பஞ்சாப் கிரிக்கெட் அணியின் பார்ட்ன ருமான நெஸ்வாடியா மீது பிரீத்தி ஜிந்தா அளித்த "ஆபாச பேச்சு, அத்துமீறல், கொலை மிரட்டல்' புகாரின் லேட்டஸ்ட் நிலவரம் இது.

அமெரிக்காவிலிருந்து திரும்பிய பிரீத்தி தன் வீட்டில் வைத்து வாக்குமூலம் தரவிரும்பினார். ஆனால் சம்பவம் நடந்த ஸ்டேடியத் துக்கு வரச்சொல்லி... நடந்த சம்பவங்களை விளக்கச் சொன்னது போலீஸ். அதன்படியே விளக்கிக் காட்டினார். தன் புகாரில் சம்பவத் தை நேரில் பார்த்த சாட்சிகளின் பெயர்களை யும் குறிப்பிட்டிருந்தார். அதில் ஒருவரான தனிஷ் மெர்ச்சென்ட் என்பவர், "பிரச்சினை நடந்தது உண்மைதான். நெஸ்வாடியா, பிரீத்தி யின் கையைப் பிடித்திழுத்ததில் உண்டான காயத்தை என்னிடம் காட்டினார்' என போலீஸ் விசாரணையில் சொல்லியுள்ளாராம்.

"புகார் கொடுத்த, புகாருக்கு ஆளான நபர்களின் நண்பர்களோ, பாதுகாவலர்களோ சாட்சியம் சொல்வதை பெரிதாக எடுத்துக் கொள்ள முடியாது. பொதுவான சாட்சிகள் வேணும்' எனச் சொல்லி தொடர் விசாரணையில் இருக்கிறது போலீஸ் வட்டாரம்.

காயம்-3


"நான் ஈ' ராஜமௌலி இயக்கத்தில் "பகுபாலி', "மகாபலி' என தமிழ்-தெலுங்கில் தயாராகிவரும் வரலாற்றுப் படத்தில் அனுஷ்கா நாயகி. வீரதீர இளவரசி ரோலில் தமன்னாவும் நடிக்கிறார். பாலிவுட் தோல்வி சோகத்தில் இருந்த தமன்னா "பகுபாலி' படப்பிடிப்பிற்கு வந்தபோது பெரும் வரவேற்பளித்து தமன்னாவை உற்சாகப் படுத்தினாராம் ராஜமௌலி.

சமீபத்தில் இப்படத்தின் சண்டைக் காட்சி களில் ரிஸ்க் எடுத்த அனுஷ்காவிற்கு லேசான உள்காயமும், சுளுக்கும் உண்டானது. இதனால் ரெஸ்ட்டில் இருந்த அனுஷ் இப்போது ரஜினியின் "லிங்கா' படப்பிடிப்பில் லிங்க் ஆகியிருக்கிறார்.

காயம்-4


ஆர்யா தனது தம்பி யை ஹீரோவாக வைத்து, "தி ஷோ பீப்பிள்' நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் படம் "அமரகாவியம்'. ஆர்யாவின் முதல் தயாரிப்பு என பெரும் பில்ட்-அப் கொடுக்கப்படுகிறது.

ஆனால்...?

தமிழறிஞர் நெல்லை கண்ணனின் மகனும், பாலுமகேந்திராவின் உதவியாளருமான சுகா இயக் கத்தில் புதுமுகங்களை வைத்து எடுத்த "படித்துறை' படம்தான் ஆர்யாவின் முதல் தயாரிப்பு.

இந்தப் படத்திற்கு இளையராஜா இசை யமைத்திருந்தார். தனது தயாரிப்புக்கு இளைய ராஜா இசை அமைத்த பெருமையில் இளைய ராஜாவை ஆர்யா பேட்டி எடுத்தார். இது விஜய் டி.வி.யிலும் வெளியானது. 

"படித்துறை' படத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்ட எடிட்டர்  சுரேஷ்அர்ஸ், தன் சுய முயற்சியில் சில ஆண்டுகளுக்கு முன் தேசிய விருதுப் போட்டிக் கும் அனுப்பினார். 

சுகாவுக்கும், ஆர்யா வுக்கும் அப்படியென்ன ஈகோ தகராறோ? அதனால் ரிலீசுக்குத் தயாராக இருக்கும் ஒரு படைப்பு முடங்கிப்போய்க் கிடக்கு.

ஈகோங்கிற கட்டத் துரை மனசுவச்சா "படித்துறை'யைப் பார்க்கலாம்.

அதுசரி... யாருக் கும் அடிபடாமலே "காயம் 4'னு சொல் றியே... ஏன் கோழி?

..."மனக் காயம்'ங்க!

 உஷ்!

வேர்ல்ட் ஹீரோவின் "மெகா உருவம்' செகண்ட் பார்ட், சீயான் மற்றும் பிரமாண்ட டைரக் டரின் கூட்டணிப் படம் ஆகியவை வெளியாவதில் சிக்கல் நேர்ந்திருக்காம்.
குறித்த தேதியில் பெரும் கடனை தயாரிப்பாளர் திருப்பித் தராததால் வங்கி ஒன்று பட ரிலீசுக்கு நெருக்கடி கொடுப்பதாகத் தகவல்கள் கசியுது.

ad

ad