புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜூலை, 2014


10-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த  பாதிரியார் கைது

கேரள மாநிலம் இடுக்கி அருகே உள்ள வண்டிபெரியார் பகுதியை சேர்ந்தவர் ஜோமோன் (வயது 28). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் பாதிரியாராக பணியாற்றி வருகிறார்.

இந்த ஆலயத்தின் சார்பில் ஒரு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனமும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் அந்த பகுதியை சேர்ந்த ஏழை பெண்கள் இலவசமாக கம்ப்யூட்டர் பயிற்சி பெற்று வந்தனர்.  அதே பகுதியை சேர்ந்த ஒரு 10–ம் வகுப்பு மாணவியும் கம்ப்யூட்டர் பயிற்சி பெற்று வந்தார். அந்த மாணவியிடம் பாதிரியார் ஜோமோன் அன்பாக பழகி உள்ளார். மேலும் அவரது படிக்கும் பல உதவிகளை செய்து வந்தார்.

இந்த நிலையில் அவர் ஆசைவார்த்தைகளை கூறி அந்த மாணவியை கற்பழித்து விட்டார். மேலும் அதை தனது செல்போனில் படம் பிடித்து வைத்து கொண்டு மிரட்டி அந்த மாணவியை தொடர்ந்து தனது ஆசைக்கு பலியாக்கி வந்துள்ளார்.

நாளடைவில் அந்த பாதிரியாரின் தொந்தரவு அதிகமானது. தனது ஆசைக்கு இணங்காவிட்டால் அந்த மாணவியின் ஆபாச படத்தை இன்டர்நெட்டில் வெளியிட்டு விடுவதாக கூறி மிரட்ட தொடங்கினார். இதனால் பயந்து போன அந்த மாணவி இடுக்கி போலீஸ் சூப்பிரண்டிடம் தனக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி எடுத்துக்கூறி கதறி அழுதார்.

அவரது உத்தரவின் பேரில் தனிப்பிரிவு போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தி அந்த பாதிரியாரை கைது செய்தனர். அவரது செல்போனை பறிமுதல் செய்து சோதனை செய்த போது அதில் அந்த மாணவி மட்டுமல்லாமல் வேறு பல பெண்களின் ஆபாச படங்களும் பதிவு செய்யப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

மேலும் அந்த பாதிரியாரின் கம்ப்யூட்டரிலும் ஏராளமான ஆபாச படங்களும் பதிவு செய்யப்பட்டு வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பாதிரியார் ஜோமோன் மேலும் பல பெண்களின் வாழ்க்கையும் சீரழித்து இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையில் பாதிரியாரின் செக்ஸ் லீலைகள் வெளியானதால் அவருக்கு பெண்கள் அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அவருக்கு எதிராக போராட்டங்களிலும் இறங்கி உள்ளனர்.

ad

ad