புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஜூலை, 2014


17 மில்லியன் ரூபாவை வங்கியில் மோசடி செய்த 17 வயது இளைஞன்- கொழும்பில் இரு வைத்தியர் குழுக்களுக்கிடையில் மோதல

வங்கியொன்றில் 17.8 மில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்த 17 வயது இளைஞர் ஒருவரை பொலிஸார் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
கொழும்பு கோட்டே நீதிமன்றில் குறித்த இளைஞர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
ஏ.ரீ.எம். அட்டையப் பயன்படுத்தி மோசடி செய்யப்பட்டுள்ளது.
பொலனறுவையை வசிப்பிடமாகக் கொண்ட குறித்த இளைஞர் கடந்த ஜனவரி மாதம் ஜாஎல பிரதேசத்தில் உள்ள வங்கியொன்றில் கணக்கு ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
163,000 ரூபா வைப்பிலிட்டு இந்த கணக்கை ஆரம்பித்துள்ளார்.
குறித்த தனியார் வங்கியின் கணனி மென்பொருளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பாரியளவு பணம், இளைஞரின் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளது.
பணத்தைக் கொண்டு மோட்டார் சைக்கிள் ஒன்றை குறித்த இளைஞர் கொள்வனவு செய்துள்ளார்.
ஏ.ரீ.எம். நிலையங்களின் ஊடாக சுமார் 658 தடவைகள் பணத்தை மீளப்பெற்றுக் கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குற்றச் செயலை ஒப்புக் கொண்ட இளைஞரை கோட்டே நீதவான் திலின கமகே பிணையில் விடுதலை செய்துள்ளார்.
50,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் தலா ஒரு மில்லியன் ரூபாவான இரண்டு சரீரப் பிணைகளின் அடிப்படையில் இளைஞர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மீளப் பெற்றுக்கொண்ட பணத்தை திருப்பிச் செலுத்த இளைஞர் ஒப்புக்கொண்டுள்ளார்.

ad

ad