புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஜூலை, 2014

கள்ளத்தொடர்பை தட்டிக்கேட்டார் மனைவி : குத்திக்கொன்றார் கணவன் 
இலங்கைப் பெண் ஒருவரை குவைத்தில் நாட்டில் அவரது கணவர் பலமுறை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். 
 
கணவருக்கு மற்றொரு பெண்ணுடன் தொடர்புள்ளதை அறிந்துகொண்ட குறித்த பெண் கணவனுடன் வாக்குவாதப்பட்டத்தை அடுத்தே குறித்த பெண் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 
 
சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து சம்பவ இடத்துக்கு பொலிஸார் விரைந்த பொலிசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டுசென்றுள்ளனர். 
 
குறித்த கொலை சம்பவம் தொடர்பில் கணவனிடம் பொலிசார்  மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது இனம் தெரியாத பெண்ணொருவர் என் மனைவியை கொலை செய்து விட்டதாகக் கூறியுள்ளார். 
 
இவரது தகவலில் சந்தேகம் கொண்ட பொலிசார் மேற்கொண்ட தீவிர விசாரணைகளின் போது, தனக்கு பிறிதொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை மனைவி அறிந்து கொண்டதால் எங்கள்ம் இருவருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டதை அடுத்து அவரைக் குத்திக் கொன்றதாக அவர் ஒப்புக் கொண்டுள்ளார். 
 
 

ad

ad