புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜூலை, 2014

வந்துவிட்டது வாகனம்; நாளை வழங்கப்படும் எனவும் தகவல் 
வடக்கு மாகாண அமைச்சர்கள் மற்றும் அவைத்தலைவருக்கான வாகனங்கள் யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.


அரசினால் வரிவிலக்கழிக்கப்பட்டு மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் வாகனங்கள் வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே. சிவஞானம், அமைச்சர்களான ஐங்கரநேசன், குருகுலராசா மற்றும் டெனீஸ்வரன் ஆகியோருக்கான 4 வாகனங்கள் இன்று கொண்டுவரப்பட்டுள்ளன.

அதன்படி குறித்த வாகனங்கள் நாளை ஆளுநரினால் வழங்கப்படவுள்ளதாகவும் முதலமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் ஆகியோருக்கான வாகனங்கள் விரைவில் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபை உறுப்பினர்களின் வாகன கொள்வனவுக்கு என வரவு செலவுத்திட்டத்தில் தலா 58 இலட்சம் ஒதுக்கப்பட்டது. அந்த நிதியில் இருந்தே குறித்த வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

இதன்படி எதிர்வரும் 15ஆம் திகதி இடம்பெறவுள்ள மாகாண சபை அமர்வுக்கு அமைச்சர்கள் மற்றும் அவைத்தலைவர் ஆகியோர் புதிய வாகனங்களிலேயே வந்து இறங்குவர் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

ad

ad