புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜூலை, 2014

தமிழ் இன அழிப்பின் திட்டமிட்ட செயலே இது மாவை சேனாதிராசா தெரிவிப்பு 
அரசு தமிழர் பகுதிகளில் தனது படைகளை நிலைபெறச் செய்து தந்திரமாக எமது கலாசாரத்தையும், பண்பாடுகளையும் அழித்து வருகின்றது என்பதற்கு இது ஓர் உதாரணம் இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாராசா.
 
காரைநகரில் 11 வயதுச் சிறுமிகள் இருவர் பாலியல் வன் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதை கண்டித்து நேற்று அங்கு கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. அதில் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் மேலும் தெரி வித்ததாவது;
 
"பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும். குழந்தைகளுக்கு இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறக்கூடாது. பெண்கள் அமைப்பு அத்தகைய விடயங்களுக்கு எதிராகப் போராடவேண்டும். 
 
அந்தச் சிறுபிள்ளை எவ்வாறு அடையாளம் காட்டும்? எப்படி அவனது பெயரை தெரிந்திருக்க முடியும்? இந்த நிலைமை தொடரக்கூடாது. இங்குள்ள முப்படையினரும் எமது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
 
வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் அங்கு உரையாற்றுகையில் "சிங்களப் படையினர் இவ்வாறுதான் நடந்து கொள்வார்கள். அதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. 
 
அதனால்தான் அவர்களை இங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றோம். ஆனால் இந்த விடயத்தை ஏன் பெரிது படுத்தியிருக்கிறீர்கள் சுமுகமாகத் தீர்த்திருக்கலாம் என்று இங்குள்ள அமைச்சரின் பிரதிநிதியான காரைநகர் பிரதேசசபை உறுப்பினர் கூறியுள்ளார். 
 
அவர் தமிழன் என்று பேசுகிறார். இங்கு குழந்தைகளுக்குக்கூட பாதுகாப்பு இல்லை என்று நாம் பேசிவரும் நிலையில் இவ்வாறு அரசுக்குச் சாதகமாக சிலர் விமர்சனம் செய்து தமது தவறுகளுக்குப் பிராயச்சித்தம் செய்து வருகிறார்கள் அதனை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். இங்கிருந்து வேரோடு எப்பொழுது அரச ஆயுதப் படையினர் வெளியேற்றப்படுகிறார்களோ அன்றுதான் எமக்கு நிரந்தரத்தீர்வு கிடைக்கும்.'' என்று தெரிவித்தார்.
 
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் எஸ்.கஜேந்திரன் அங்கு உரையாற்றுகையில்: 
 
"சிங்கள பெளத்த பேரினவாதம் தம் விருப்பம் போன்று தமிழர்களை வேட்டையாடி வருகிறது. வடக்கு கிழக்கில் தினமும் இவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் அவை எல்லாம் வெளியே வருவதில்லை. மனுக் கொடுத்தபோதும் அதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என்று யாரும் நம்பமாட்டார்கள். சர்வதேச மட்டத்துக்கு இந்தக் கொடுமைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது நோக்கம்.'' என்று தெரிவித்தார்.
 

ad

ad