புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஜூலை, 2014


நரேந்திர மோடி உலகின் இரண்டாவது தலைசிறந்த அரசியல்வாதி: பேஸ்புக் தலைமை இயக்க அதிகாரி
பிரதமர் நரேந்திர மோடி உலகின் இரண்டாவது புகழ்பெற்ற அரசியல்வாதி என பேஸ்புக் இணையதளத்தின் தலைமை இயக்க அதிகாரியான ஷெரில் சாண்ட்பர்க்
தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் உள்ள முன்னணி தொலைக்காட்சி ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், ’’உலகின் இரண்டாவது புகழ்பெற்ற அரசியல்வாதியான மோடிக்கு 18 மில்லியன் பேஸ்புக் நண்பர்கள் உள்ளனர். மோடியின் பேஸ்புக்கில் அவரது தாயார் அவரை ஆசிர்வதிக்கும் புகைப்பட காட்சி வியப்ப ளிக்கிறது.

அது எனக்கு தனிப்பட்ட முறையில் பிடித்தமானது. சமூக ஊடங்களின் முக்கியத்துவத்தை மோடி உணர்ந்துள்ளது எனக்கு உற்சாகத்தை அளிக்கிறது. பேஸ்புக்கின் மிகப்பெரிய சந்தையாக இந்தியா உருவெடுக்க உள்ளது. இந்தியாவில் தான் அதிகம் பேர் மொபைல் போனில் பேஸ்புக் பார்க்கிறார்கள்.
தேர்தலின் போது பலர் பேஸ்புக்கை பயன்படுத்தியது உற்சாகத்தை அதிகரித்திருக்கிறது. இந்தியா மிகவும் நம்பிக்கைக்குரிய சந்தையாகும். உற்சாகத்துடன் வேலை பார்க்கும் ஊழியர்கள் கிடைக்கும் மிகப்பெரிய நாடாக இந்தியா காட்சி தருகிறது’’ என மிகுந்த மகிழ்ச்சியுடன் ஷெரில் கூறினார்.

ad

ad