புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜூலை, 2014


இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியில் மாற்றம்?

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக ஞாயிறு பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவி, வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு வழங்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
கட்சியின் தலைமைப் பதவியை நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் வகித்து வருகின்றார்.
சம்பந்தனின் பூரண ஆசீர்வாதத்துடன் தலைமைப் பதவியில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
சம்பந்தனின் வயது முதிர்ச்சியைக் கருத்திற் கொண்டு புதிய தலைமை ஒன்றுக்கு சந்தர்ப்பம் வழங்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தலைமைத்துவ பதவியில் ஏற்படுத்தப்பட உள்ள மாற்றங்கள் தொடர்பில் உயர்மட்ட உறுப்பினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 21, 22 அல்லது 23ம் திகதியில் கட்சியின் பொதுச்சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தின் போது கட்சியின் புதிய தலைமை குறித்த தீர்மானம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக தொடர்ந்தும் சம்பந்தன் பதவி வகிப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ad

ad