புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜூலை, 2014


தமது அறிக்கை முன்கூட்டியே தயாரிக்கப்பட்டதல்ல!- நவநீதம்பிள்ளை
முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பான தமது அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை நிராகரித்துள்ளார்.
அல் ஜெசீரா தொலைக்காட்சியில் நேற்று இடம்பெற்ற டோக் டு அல் ஜெசீரா நிகழ்ச்சியின் போது நவநீதம்பிள்ளை தம் மீதான குற்றச்சாட்டை மறுத்தார்.
ஐக்கிய நாடுகள் சபையில் நவநீதம்பிள்ளையின் பயணம் என்ற தலைப்பில் இந்த நிகழ்ச்சி இடம்பெற்றது.
தாம் இலங்கைக்கு விஜயம் செய்தபோது சந்தித்த சாட்சிகளின் தகவல்கள் அடிப்படையிலேயே தமது அறிக்கை தயாரிக்கப்பட்டதாக நவநீதம்பிள்ளை இதன்போது குறிப்பிட்டார்.

ad

ad