புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஜூலை, 2014


லங்கை சைக்கிள் ஓட்ட வீரர்களை தடுத்து நிறுத்திய ஸ்கொட்லன்ட்யாட் பொலிஸார்
பொதுநலவாய நாடுகளின் போட்டிகளுக்காக சென்ற சைக்கிள் ஓட்ட வீரர்கள், ஸ்கொட்லன்ட்யாட் பொலிஸாரால் தடுக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நான்கு பேரைக் கொண்ட இலங்கை சைக்கிள் ஓட்ட வீரர்கள், ஸ்கொட்லான்ட்யாட்டின் மிகவும் சுறுசுறுப்பு மிக்க வீதியில் பயணித்துள்ளனர்.
இது தொடர்பில் தகவல் அளித்துள்ள ஸ்கொட்லன்ட்யாட் பொலிஸார்,
குறித்த நான்கு பேரும் எம் 77 வீதியின் மதர்வெல் மற்றும் ஹமில்டன் வெளிச்செல்லும் இடத்தில் வைத்து தடுக்கப்பட்டனர். இதன்போது குறித்த வீரர்கள் வீதி ஒழுங்கை மீறியதாக அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து அவர்களை வீதியில் இருந்து அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சைக்கிள் ஓட்ட வீரர்கள் தடுக்கப்பட்ட இடம் எதிர்வரும் வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் ட்ரைலதன் (நீண்ட தூர ஓட்டம், நீச்சல் மற்றும் சைக்கிளோட்டம்) போட்டிகள் இடம்பெறவுள்ள இடத்துக்கு அருகில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்)
இதேவேளை, 2002ம் ஆண்டு மான்செஸ்டர் விளையாட்டுப் போட்டிகளின் போது இரண்டு கென்ய சைக்கிளோட்ட வீரர்கள், போக்குவரத்து நெரிசல் மிக்க எம் 61 வீதியில் பிரவேசித்திருந்தனர். இந்த வீரர்களையும் பொலிஸார் தடுத்து நிறுத்தியிருந்தனர்.

ad

ad