புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஜூலை, 2014


வேட்டிக்குத் தடைவிதிக்கும் விதிமுறையை நீக்க சட்டத்திருத்தம்: சட்டப்பேரவையில் ஜெயலலிதா பேச்சு

தமிழக சட்டப்பேரவையில் புதன்கிழமை பேசிய ஜெயலலிதா, 

தனியார் கிளப்புகளில் வேட்டிக்கு தடை விதித்தது கடும் கண்டனத்துக்கு உரியது. தடையை நீக்க நடப்பு கூட்டத் தொடரில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும். சட்டத்தை மீறி வேட்டிக்கு தடை விதித்தால் கிளப்புகளில் அனுமதி ரத்து செய்யப்படும். விளக்கம் கேட்டு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படும். வேட்டி அணிந்து வரக்கூடாது என தமிழ்நாடு கிரிக்கெட் சங்க விதியில் கூறப்படவில்லை. 

வேட்டிக்கு தடை விதித்தது தனிநபர் உரிமை, ஜனநாயகம், கலாச்சாரத்திற்கு எதிரானது. சுதந்திரமடைந்து 67 ஆண்டாகியும் இதுபோன்ற நடைமுறை தொடர்வது வேதனை தருகிறது. வேட்டி அணிந்த நீதிபதிக்கு அனுமதி மறுத்தது பண்பாட்டை அவமதிக்கும் செயல் என்றார்.

ad

ad