புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஜூலை, 2014

காகங்களின் இருப்பிடமாக மாறிவரும் யாழ்.பேருந்து நிலையம் 
யாழ்.பேருந்து நிலையமானது காகங்களின் இருப்பிடமாக மாறிவருவதுடன் அந்த தரிப்பிடம் மக்கள் உபயோகிப்பதற்கு மிக அசுத்தமாக இருப்பதால் அவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு ஆளாகின்றனர்.
 
எனினும் மக்களின் இந்த அசௌகரியங்களை போக்கும் விதத்தில் பேருந்து நிலையத்தை சுத்தமாக்கி காகக் கூடுகளை அப்புறப்படுத்த வேண்டியது அதிகாரிகளின் கடமையாகும்.
 
இதேவேளை பேருந்து நிலையத்தை நோக்கி வரும் காகங்கள் மக்களின் மேல் எச்சங்கள் போடுவதுடன் நிலையத்தையும் அசுத்தமாக்குகின்றன.
 
எனவே மக்களின் நலன் கருதி இந்த பேருந்து நிலையத்தை சுத்தப்படுத்த உரிய அதிகாரிகள் கவனமெடுக்க வேண்டும் என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 

ad

ad