கற்பழித்தவரின் ஆணுறுப்பை வெட்டிய பெண்
பீஹார் மாநிலத்தில் கற்பழிக்கவந்த மந்திரவாதியின் ஆணுறுப்பை 18 வயது பெண் கத்தியால் வெட்டியுள்ளார்.
இந்த சம்பவம் பீஹார் மாநிலம் மதேபுரா மாவட்டத்தில் இடம்பெற்றது. இதே மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது பெண் நோய் வாய்ப்பட்டாள்.. அதனால் அவளது தாய் அவளை ஒரு மந்திரவாதியை போன்ற ஒருவரிடம் அழைத்து சென்றுள்ளார்.
மந்திரவாதி பெண்ணுக்கு சில புதிய சக்திகள் வந்துள்ளது என கூறியுள்ளான். அவளை தனி அறைக்கு அழைத்து சென்று அவளை அனுபவிக்க நினைத்து உள்ளான். அதற்கு சம்மதிக்காத அந்த பெண்ணை கற்பழித்துள்ளான். அடுத்த நாளும் அந்த பெண்ணை தனது வீட்டிற்கு அழைத்து உள்ளான்.
இந்த முறை அந்த பெண் தனக்கு பாதுகாப்பாக கத்தியை எடுத்து சென்றுள்ளாள். அவன் கற்பழிக்க முயற்சி செய்த போது அவனின் ஆண் உறுப்பை அவள் வைத்து இருந்த கத்தியால் வெட்டி விட்டாள். உடனடியாக அவன் அந்த இடத்தை விட்டு தப்பித்து சென்று விட்டான்.
இது குறித்து அந்த பகுதி பொலிஸாரிடம் அந்த பெண்ணின் மீது ஏதாவது வழக்கு போடப்படுமா என கேட்டதற்கு , எதற்காக அவள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். அவளின் இந்த தைரியமான செயலை பாராட்ட தான் வேண்டும். இது பல பெண்களுக்கு முன்னுதாரணம் ஆகும் என தெரிவித்தார்.