புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஆக., 2014

கணக்காய்வாளர் பிராந்திய அலுவலகம் இன்று திறப்பு 
 215ஆண்டு கால வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட வடமாகாண கணக்காய்வாளர் தலைமையதிபதி திணைக்களத்தின் வடபிராந்தியத்துக்கான அலுவலகம் சொந்தக் கட்டடத்தில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

 
இன்று காலை 9மணியளவில் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் கணக்காய்வாளர் தலைமை அதிபதி ஏ.ஏஸ்.சமரவீர அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
 
12மில்லியன் ரூபா செலவில்  நெல்சிப்,என்றிப் நிறுவனத்தின் நிதியுதவியுடனே இந்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
 
மேலும் இந்நிகழ்வில் பிரதம செயலாளர் விஜயலட்சுமி,ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் உதவிக் கணக்காய்வாளர் நாயகம் தேவஞானம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
 
 
 
 
 
 

ad

ad