மசாஜ் நிலையத்தில் விபச்சார விடுதி ; 3 பெண்கள் கைது
மருதானை, டாலி வீதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதியொன்று மேல் மாகாண மோசடி ஒழிப்பு பிரிவினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
இதன்போது சந்தேகநபர் ஒருவரும் 03 பெண்களும் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
மேலும் இதில் 28, 38 மற்றும் 47 வயதான பெண்களே கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.