புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஆக., 2014

 யாழில் இருவாரத்தில் 327 பேர் கைது 
யாழ். மாவட்டத்தில் கடந்த இரண்டு வார காலத்தில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் எனக் கருதப்படும் 327 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்  நிஹால் பெரேரா இதனைத் தெரிவித்தார்.
 
அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
யாழ்ப்பாணம், காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுகளில் உள்ள பொலிஸார் மேற்கொண்ட தேடுதல்கள் மற்றும் பரிசோதனைகள் உட்பட பல்வேறு சந்தர்ப்பங்களில் இவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
 
 
யாழ். பொலிஸ் அத்தியட்சகர் பிரிவில் உள்ள ஒன்பது பொலிஸ் நிலையங்களிலும் கடந்த 14 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரையான இரு வார காலத்தில் 206 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
 
அடித்துக் காயப்படுத்தியமை தொடர்பிபாக 58 பேரும் கொள்ளை தொடர்பில் ஒருவரும், பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் ஒருவரும், குடிபோதையில் கலகம் விளைவித்தமை தொடர்பில் 6 பேரும், சந்தேகத்தின் பேரில் 8 பேரும், பிடி யாணை பிறப்பிக்கப்பட்டவர் கள் 33 பேரும், வாகன விபத்து தொடர்பாக 12 பேரும், களவு தொடர்பில் 5 பேரும், குடிபோ தையில் வாகனம் செலுத்தியமை தொடர்பில் 4 பேரும், அத்து மீறி வீட்டில் நுழைந்தமை தொடர்பில் ஒருவரும், போலி நகையை அடைவு வைத் தமை தொடர்பில் 2 பேரும்,  சுற்றுச் சூழல் பாதிப்படையும் வகையில் செயற்பட்ட 2 பேரும், பாதுகாப்புக் காரணங்களுக்காக 4 பேரும், சட்டவிரோமாக மின்சாரம் பெற்றவர்கள் 2 பேரும், மோசடி சம்பந்தமாக ஒருவரும், ஏனைய குற்றங்கள் தொடர்பில் 66 பேரும் கைதாகினர் என  பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.
-

ad

ad