புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஆக., 2014


ராஜபக்சேவை கண்டித்து அகதிகள் முகாமில் ஆர்ப்பாட்டம்
    இலங்கை அரசாங்கம் தமிழக முதல்வரை தகாத வார்த்தைகளால் இணைய தளத்தில் செய்தி வெளியிட்டதை கண்டித்தும். முகாம்
மக்களுக்கு அடிப்படை வசதிகள் கோரியும் புதுக்கோட்டை மாவட்டம் தோப்புக் கொல்லை அகதிகள் முகாமில் உள்ள மக்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

     மேலும் அவர்கள் கூறும் போது.. தமிழகம் எங்கள் தாயகம். எங்களை தங்க வைத்து அடைக்கலம் கொடுத்துள்ள தமிழகத்தின் முதலமைச்சரை விமர்சனம் செய்த இலங்கை அரசாங்கத்தையும் அந்த அதிபர் ராஜபக்சேவையும் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம்.

   மேலும் எங்கள் தோப்புக்கொல்லை முகாமில் சுகாதார வசதிகள் குறைவாக உள்ளது. மேலும் குடிதண்ணீர் போன்ற அத்தியாவசிய தேவைகள் குறைவாக உள்ளது அதனை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் கூறினார்கள்.

ad

ad