புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஆக., 2014

அதிகாரிகளின் கடும் அழுத்தம் ! சங்க, மஹேல, மலிங்க, பெரேரா ஓய்வு
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்கள் நால்வர் அடுத்தாண்டு நடைபெறவுள்ள உலகக்கிண்ண தொடரின் முன்பாக ஓய்வு பெறவுள்ளதாக கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

 
இலங்கை கிரிக்கெட்சபை அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக முன்னணி வீரர்களான சங்ககார, மஹேல, மலிங்க, பெரேரா ஆகியோரே ஓய்வு பெறவுள்ளதாக குறித்த வீரர்களிற்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.
 
இவர்கள் நால்வரும் வெளிநாட்டு தனியார் அணிகளில் விளையாடி வரும்  நிலையில் வெளிநாடு அணிகளில் விளையாடுவதை விடுத்து இலங்கை அணியிலும் அது சார்ந்த அணியிலும் மட்டுமே விளையாடுமாறு அதிகாரிகள் வற்புறுத்தி வருகின்றனராம்.
 
இதனால் அதிருப்தி அடைந்துள்ள இந்த வீரர்கள் சர்வதேச போட்டிகளில் இருந்து ஒய்வு பெற்று ஐ. பி.எல் போன்ற வெளிநாட்டு தொடர்களில் பங்கு பற்ற தீர்மானித்துள்ளனர்.
 
இவர்கள் 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதமளவில் தங்கள் ஓய்வை அறிவிக்க வுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர், இதனால் இலங்கை அணி உலகக்கிண்ண தொடரில் பெரும் பின்னடைவை சந்திக்கும் என எதிர்பாக்கப்படுகின்றது.

ad

ad