புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஆக., 2014

மூவர் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று கூறிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு பழ.நெடுமாறன் கண்டனம்

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று கூறிய முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு, உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
சேலத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் :  சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை, உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைந்து விட்ட நிலையில், அவர்களுக்கான தூக்குத் தண்டனையை நிறைவேற்றச் சொல்வது, நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என்றும் குறிப்பிட்டார்.

ad

ad