புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஆக., 2014

இறுதி வாத தொகுப்புரையை முடிக்காவிட்டால் இன்றே தீர்ப்பு தேதி அறிவிப்பு! ஜெ.வுக்கு கோர்ட் எச்சரிக்கை!

சொத்துக்குவிப்பு வழக்கில் இறுதி வாதத்திற்கான தொகுப்புரையை ஜெயலலிதா தரப்பு இன்று (புதன்கிழமை) மாலைக்குள் நிறைவு செய்யாவிட்டால், தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் என்று பெங்களுரு சிறப்பு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், குற்றவாளிகள் தரப்பு இறுதிவாதம் முடிவுற்ற நிலையில், அதற்கான தொகுப்புரையை வழங்குவதற்கு ஜெயலலிதா தரப்புக்கு இன்று அரைமணி நேரம் அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பெங்களுரு சிறப்பு நீதிமன்றத்திற்கு வரவில்லை. அவர் வேறொரு வழக்கிற்காக உயர்நீதிமன்றம் சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி மைக்கேல் டிகுன்கா, இன்று (புதன்கிழமை) மாலை 5 மணிக்குள் தொகுப்புரையை நிறைவு செய்யாவிட்டால், தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் என்றார்.

இதேபோல் அரசு தரப்பு வழக்கறிஞர் பவானிசிங்கிற்கும் இரண்டு மணி நேரம் அவகாசம் அளிக்கப்பட்டிருந்தும், அவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து பவானிசிங்கும் மாலை 5 மணிக்குள் ஆஜராகி வாதத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என்று நீதிபதி கூறியுள்ளார்.

ad

ad