யாழ். மணிக்கூட்டு கோபுரத்துக்கு தமிழ் மன்னர்கள் மூவர் இன்று வருகை
யாழ். மணிக்கூட்டு கோபுர சுற்று வட்டத்தில் தமிழ் மன்னர்கள் மூவரினது சிலைகள் இன்று மாலை 4 மணியளவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
யாழ். மாநகர சபையால் நிறுவப்பட்ட குறித்த சிலைகளை அமைச்சர் டக்களஸ் தேவானந்தா திறந்துவைத்தார்.
யானை மீதேறிய எல்லாளன், குதிரைகள் மீது பண்டாரவன்னியன், பரராசசேகரன் ஆகிய மன்னர்களது சிலைகள் மணிக்கூட்டு கோபுரத்தை சுற்றி மூன்று திசைகளில் இடம் பிடித்துள்ளன.
இச்சிலைகளை ஈழத்தின முக்கிய சிற்பக் கலைஞர்களில் ஒருவரான யாழ் மத்திய கல்லூரி முன்னாள் ஆசிரியர் கலாபூஷணம் செல்லையா சிவப்பிரகாசம் வடிவமைத்துள்ளார்.