அழகிரிக்கு இடைக்கால ஜாமீன்
மு.க.அழகிரி தனது தயா பொறியியல் கல்லூரிக்கு, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 40 சென்ட் நிலத்தை, போலி பத்திரம் தயாரித்து பெயர் மாற்றம் செய்ததாக இந்து அறநிலையத்துறை மூலம் மதுரை புறநகர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் உள்ள நிலஅபகரிப்பு பிரிவில் புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து மு.க.அழகிரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்தநிலையில் இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட் கிளையில் மு.க.அழகிரி சார்பில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை நீதிபதி கல்யாண சுந்தரம் விசாரித்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி கல்யாணசுந்தரம், ‘’ வரும் 3ம் தேதி இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறேன். அதுவரை அழகிரியை கைது செய்யக்கூடாது. அவருக்கு இடைக்கால ஜாமீன் அளிக்கிறேன்’’ என்று உத்தரவிட்டார்.