புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 செப்., 2014

யாழில் பொதுமக்கள் மத்தியில் நடந்த கொடூரம்
தெல்லிப்பழையில் பொதுமக்கள் மத்தியில் இரண்டு பேரை துரத்தித் துரத்தி வாளொல் வெட்டிய சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
சினிமா பாணியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மக்கள் பலர் பார்த்திருக்க இருவரை வாளால் வெட்டிக் காயப்படுத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர் எனக் இதனைக் கண்ணுற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பல்சர் ரக மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பலரும் பார்த்திருக்கக் கூடியதாக வீதியில் நின்ற இருவரை துரத்தி துரத்தி வாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றனர் எனக் கூறப்படுகின்றது.
இதில் படுகாயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்தவர்களில் ஒருவர் அப்பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றுபவர் அப்பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
எனினும் இத்தாக்குதல் சம்பவம் நடந்தமைக்கான காரணம் வெளியாகவில்லை.

ad

ad