புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 செப்., 2014


அனிருத் இசையில் கே.ஜே.யேசுதாஸ் பாடல்
விஜய் நடிப்பில் உருவாகிவரும் புதிய படம் ‘கத்தி’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் ஆடியோ வெளியீடு வருகிற செப்டம்பர் 18-ந் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கிறது.


இப்படத்தில் விஜய் தனது சொந்த குரலில் ‘செல்பிபுள்ள’ என்ற பாடலை பாடியுள்ளார். இந்நிலையில், கே.ஜே.யேசுதாசும் இந்த படத்தில் ஒரு பாடலை பாடியிருக்கிறார். இதை தனது டுவிட்டர் பக்கத்தில் அனிருத் குறிப்பிட்டுள்ளார். யேசுதாஸ் பாடிய பாடல் தனக்கு தெய்வீக அனுபவத்தை தருவதாகவும் அனிருத் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கெனவே, அனிருத் இசையில் பழம்பெரும் பாடகி ஜானகி ‘வேலையில்லா பட்டதாரி’ படத்துக்காக பாடியுள்ளார். தற்போது ‘கத்தி’ படத்துக்காக யேசுதாஸ் அனிருத் இசையில் பாடியுள்ளார். ‘கத்தி’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். படத்தை தீபாவளிக்கு கொண்டுவர முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

ad

ad