புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 செப்., 2014

 தி.மு.க.வுடன் நான் சமரசமாகி விட்டதாக கூறுவதால், சமரசம் ஏற்பட்டு விடாது என மு.க.அழகிரி கூறினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ''தி.மு.க.வினர் மற்றும் தமிழர்கள் அனைவரும் கருணாநிதியைத்தான் தலைவராக ஏற்றுக்
கொண்டிருக்கிறார்கள். நானும் இதைத்தான் ஆரம்பத்தில் இருந்தே கூறிவருகிறேன். கொள்கை பிடிப்புள்ள அனைவரும் கருணாநிதியின் தலைமையைத்தான் ஏற்றுக் கொள்வார்கள். ஸ்டாலின் தலைமையை ஏற்கமாட்டார்கள்.

தி.மு.க.வின் உள்கட்சி தேர்தல் முறையாக நடக்கவில்லை. கட்சியில் இல்லாதவர்களையும் உறுப்பினர்களாக சேர்த்து தேர்தல் நடத்துகிறார்கள். நெல்லை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட அனைத்து மாவட்டங்களிலும் உள்கட்சி தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளன. இதை நான் ஆதாரத்துடன் கொடுக்க தயாராக இருக்கிறேன். என்னுடைய கோரிக்கைகள் எதுவுமே நிறைவேறவில்லை. தி.மு.க. தலைவர் கருணாநிதியை நான் சந்திக்க தேவை இல்லை. சந்திக்கவும் மாட்டேன்.

நான் தி.மு.க.வில் சமரசமாகி விட்டதாக சிலர் கூறி வருகின்றனர். அவர்கள் இதுபோன்று கூறுவதால் சமரசம் ஏற்பட்டு விடாது. நான் கட்சியில் இல்லாததால் உண்மையான கட்சிக்காரர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தான் உண்மை. மற்றபடி நான் கட்சியில் சேரலாம் என்று வந்த செய்தியால் கட்சி நிர்வாகிகள் யாரும் பயப்படவில்லை'' என்றார்.

ad

ad