புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 செப்., 2014

புலிகளின் இரண்டாம் நிலைத் தலைவர்கள் வெளிநாடுகளில் மறைந்துள்ளனர்: கெஹலிய ரம்புக்வெல

தலைவர்கள் வெளிநாடுகளில் மறைந்து வாழ்ந்து வருவதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் அவர்கள் மறைந்து வாழ்வதாகவும் இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவில் அண்மையில் கைதுசெய்யப்பட்ட இலங்கையரான அருண் செல்வராஜன் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்து கருத்துத் தெரிவிக்கும் வெளியிடும் போதே அரசாங்கத்தின் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “விடுதலைப் புலிகளுக்கு ஆயுதப்பயிற்சி வழங்கி அவர்களை வளர்த்ததும் இந்தியாதான். பிரபாகரனைத் தோற்கடிப்பதற்கு இலங்கை அரசுக்கு ஆயுத உதவி வழங்கியதும் இந்தியாதான். அதே புலிகளின் ஒருசிலர் இன்று பாகிஸ்தானுடன் சேர்ந்து இந்தியாவுக்கு எதிராகச் செயற்படுகின்றனர்.
இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கையரான அருண் செல்வராஜன் குறித்து இந்திய புலனாய்வு அதிகரிகள் இலங்கைக்கு வந்து விசாரணை நடத்துவதற்கு நாம் பூரண ஒத்துழைப்பு வழங்குவோம்.
விடுதலைப் புலி உறுப்பினர்கள் தீவிரவாத அமைப்புக்களுடன் இணைந்து செயற்படுவதற்கு முயறிசிக்கின்றனர். இவர்களால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் ஆபத்துள்ளது. நாம் புலிகளை மீள அணிதிரள ஒருபோதும் இடமளிக்கமாட்டோம், அத்துடன் இந்தியாவும் கவனத்துடன் இருக்கவேண்டும்” என்றுள்ளார்.

ad

ad