புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 செப்., 2014


                    கண்ணீர் அஞ்சலி 
                                தில்லையம்பலம் பாலசிங்கம்
                                             (இளைப்பாறிய கிராமசேவகர் )
கனடாவில் வசித்து வந்த பாலசினகம் விதானையார் காலமாகி விட்டார் என்பதனை ஆழ்ந்த கவலையுடன் தெரிவிக்கின்றேன் . திரு பாலசிங்கம்  
விதானையார் நீண்ட காலம்  கிழக்கு கிராமசேவகராக பதவி வகித்து இப்பகுதி மக்களின் அன்பை பெற்றுக் கொண்டவர்.நல்ல நீதியானவரும் ஏழைகளின் பால் அன்பு கொண்டவருமாக தனது பதவி காலத்தில் பனி புரிந்து வந்தார் .எனது தாயார் இளமை காலத்தில் இருந்தே விதைவையாக வாழ்ந்து வந்த காலங்களில் நிறைய உதவிகளை செய்து எங்கள் குடும்பத்தில் மதிப்புக்கு ஆளாகி  இருந்தார் எனது தாயாருக்கு நிறைய காணி கள் இருந்தமையால் பல்வேறு தேவைகளுக்கு எனது தாயாரின் பக்கம் நின்று நியாத்துக்கு வழி கண்ட ஒரு கிராமசேவகர் .எனது இளமை பருவத்தில் கூட  வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் ஒவ்வொரு கட்டத்திலும்  நல்ல  சிறந்த நட்சாட்சிப்பதிரன்களை வழங்கி ஊக்குவித்தவர்.அத்தோடு  எமது மடத்துவெளி சனசமூக நிலையத்க்ஹின் மீது பற்றுக் கொண்டவர் எமது  நிலைய இளைஞர்களோடு சேர்ந்து சகசமாக பழகி அன்பு காட்டி வந்தவர். மாறாக  இவர்  எங்களிடம் 7 ஆம் 8 ஆம் 9 ஆம் வட்டார தேர்தல் வாக்காளர் பதிவுகளை  தந்து நிரப்பி பதிவு செய்து தர பணிப்பார்.இவர் மீது கொண்ட அன்பால் இதனை நாங்கள் மனமுவந்து செய்து கொடுத்திருக்கிறோம் குடிசன மதிப்பீடுகளை செய்து கொடுப்போம் எமது பகுதிகளில் மது ஒழிப்பு  நன்னீர் விநியோகம் மற்றும் சமூக சேவை பணிகளுக்கு எமது மடத்துவெளி சனசமூகநிலையம் அறிவகம்  என்பவற்றோடு ஒத்துழைத்து வந்த  ஒரு  மகான் அன்னாரின்  மறைவுக்கு அவரின் குடும்பத்துக்கு எமது இரங்கலை தெரிவிக்கிறோம் .எமது கண்ணீர் அஞ்சலியை இத்தால் சமர்ப்பிக்கிறோம்

ad

ad