புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 செப்., 2014

பெண்களின் நடனத்தால் மயங்கிய அதிகாரிகள்: இலங்கை தமிழ் உளவாளியின் யுக்தி

பாகிஸ்தான் உளவாளி அருண் செல்வராஜ், பலவீனமான அதிகாரிகளை மதுபானக்கடைகளில் கிறங்க வைத்து ரகசிய தகவல்கள் அறிந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த 26ம் திகதி சென்னை சாலிகிராமம், கே.கே சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், பாகிஸ்தான் உளவாளியும், இலங்கை தமிழருமான அருண் செல்வராஜை (26) தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்துள்ளனர்.
சட்டவிரோதமாய் விமான பயிற்சி பெற்ற அருண், சென்னையின் பல்வேறு முக்கிய இடங்களை படம் பிடித்துள்ளான்.
போலி பத்திரிகையாளராய் சென்னையில் வலம் வந்த அருணின் நட்பு வட்டத்தில், பெண்களே அதிகம்.
எனவே பலவீனமான அதிகாரிகளை தன் பெண் தோழிகளுடன் இணைத்து மதுபானக்கடைகளில் பார்ட்டி வைத்துள்ளான், மேலும் அவர்களை நடனமாடவிட்டு,அதிகாரிகளுக்கு துாண்டில் போடும் விதமாக அவர்களுக்கு பல நேரங்களில் மது வகைகளை வாங்கி கொடுத்து உளவுத் தகவல்களை சேகரித்துள்ளான்.

ad

ad