கடந்த 26ம் திகதி சென்னை சாலிகிராமம், கே.கே
சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், பாகிஸ்தான் உளவாளியும், இலங்கை
தமிழருமான அருண் செல்வராஜை (26) தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது
செய்துள்ளனர்.
சட்டவிரோதமாய் விமான பயிற்சி பெற்ற அருண், சென்னையின் பல்வேறு முக்கிய இடங்களை படம் பிடித்துள்ளான்.
போலி பத்திரிகையாளராய் சென்னையில் வலம் வந்த அருணின் நட்பு வட்டத்தில், பெண்களே அதிகம்.
எனவே பலவீனமான அதிகாரிகளை தன் பெண் தோழிகளுடன் இணைத்து மதுபானக்கடைகளில்
பார்ட்டி வைத்துள்ளான், மேலும் அவர்களை நடனமாடவிட்டு,அதிகாரிகளுக்கு
துாண்டில் போடும் விதமாக அவர்களுக்கு பல நேரங்களில் மது வகைகளை வாங்கி
கொடுத்து உளவுத் தகவல்களை சேகரித்துள்ளான்.
|