புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 செப்., 2014




""ஹலோ... யாரு ராஜகுமாரியா...? திருப்பூரு உடுமலைப்பேட்டை எஸ்.ஐ.ராஜேஸ்வரி தான் பேசறேன். ஏம்மா போன் பண் ணிட்டே இருக்கறே? உங்க அம்மா குடியிருக்கிற வீட்டோட ஹவுஸ் ஓனர் நீலாவதியை யாரோ கொலை பண்ணிட்டாங்க. அதுசம்பந்தமாத்தான் உங்க அம்மாவை ஸ்டேஷனுக்கு விசாரிக்க கூப்புட்டு வந்தோம்.

பதறாதே... உன் அம்மா கொலை பண்ணலை. கை ரேகை எடுத்தும், மோப்பநாய் வச்சுக்கூட செக் பண்ணிட்டோம். ஆனாலும் கொலையான நீலாவதியோட சொந்தக்காரங்க உன் அம்மாதான் கொலை பண்ணுச்சுன்னு கோபமா இருக்கறாங்க. அதுனாலதான் நாங்க பாதுகாப்பா வச்சிருக்கிறோம்.''

""சரிங்கம்மா...''
... ...
""ஹலோ... எஸ்.ஐ.மேடங்களா? எங்கம்மா இன்னும் வீட்டுக்கு வரலைங்க.''

""அட ஆமாம்மா... உங்கம்மாதான் கொலை பண்ணாங்கன்னு கோயமுத்தூர் ஜெயில்ல போட்டாச்சு...''

""திங்கட்கிழமை நானும், என் தாத்தாவும் வந்து மனு போட்டு செயிலுக்குள்ள போய் பாத்தா... எங்கம்மாவ ரெண்டுபேரு கைத்தூக்கலா தூக்கிட்டு வந்தாக. ரெண்டு கையையும் காட்டிட்டு மூணு நாளா விசாரிக்கறேங்கற பேர்ல விரல் நகத்துக் குள்ள எல்லாம் குண்டூசி வச்சுக் குத்துனாகடீ. கால் மேல பூட்ஸ் காலை வச்சு ஏறி நின்னு அமுத்துனாக.

இதெல்லாத்தையும் விட ஏழு போலீஸ் காரவுக சுத்திநின்னு... என்னைய ஒட்டுத் துணியில்லாம தலைகீழா தொங்கவிட்டு... நீ பொறந்த உறுப்புக்குள்ள லத்திய விட்டு குத்து னாகடீ... இரத்தம் கொட்டோ கொட்டுன்னு கொட்டியும் கூட... "இந்த கொலைய நீதான் செஞ்சன்னு ஒத்துக்கடீ... அப்பதான் உன்னைய விடுவோம்'னு சொல்லியே அடிச்சாவுக.

"கொலை செஞ்சேன்னு ஒத்துக் கலைன்னா உன்னைய சாராயம் குடிக்க வச்சு ரெண்டுபேரை பக்கத்துல படுக்க வச்சு வீடியோ எடுத்து டி.வி.யில போட்டு ப்ராத்தல் கேஸ் போடுவோம்'னும் மெரட்னாக.

"ரொம்ப வலிக்குதுடீ... அம்மாவ எப்படியாவது காப்பாத்துடீ... இப்பக் கூட பாரு. இரத்தப் போக்கு நிக்கலைடீ...'ன்னு முனகிட்டே காட்னாங்கண்ணே... 

போலீஸ்காரவுக செத்துப் போன நீலா வதியோட மருமகளையும் விசாரிச்சுருக்கறாக. அவளோட தலைமுடியையும் எங்கம்மாவோட தலைமுடியையும் வெட்டி எடுத்துட்டு மருமகளை மட்டும் போலீஸ் பத்திரமா அனுப்பிவிட்டுட்டாங்க.... யாரையோ காப் பாத்தறதுக்காக என் அம்மாவை பலிகடா ஆக்கிட்டாங்கண்ணே... ஐகோர்ட்ல எங்க பெட்டிஷனை பார்த்த நீதிபதி ராமசுப்பிரமணி அய்யா... "இது மனித உரிமை மீறிய செயல்... மனிதத் தன்மையற்ற செயல்'னு சொன்னதோட உடனே மெடிக்கல் செக்-அப் எங்கம்மாவுக்கு பண்ணோம்னும், கோவை மாவட்ட நீதிபதி தலைமையில விசாரணை செஞ்சு மெடிக்கல் ரிப்போர்ட்டை கோர்ட்ல ஒப்படைக்கணும்னு உத்தரவும் போட்டாரு'' என்கிறார் ராஜகுமாரி கண்ணீர்க் கசிய.

நாம் உடுமலை எஸ்.ஐ.ராஜேஸ்வரியிடம் பேச... ""எங்க ஹையர் ஆபீசர்ஸ் மேலதான் கம்ப்ளைண்டு. எதுன்னாலும் ஸ்டேஷன்ல பேசிக்குங்க...'' என பேச மறுத்துவிட்டார்.

சந்திராவை துன்புறுத்திய போலீஸ்காரர் கள் யார் யார் என நாம் விசாரிக்க... எஸ்.ஐ. மணிமாறன், தினக்குமார், ரங்கநாதன், ரைட்டர் சுப்பிரமணி, மனோகரன், கண்ணப்பன், செல்வகணேஷ் என அடங்கிய அந்த போலீஸ் டீம்தான் சந்திராவை துன்புறுத்தியவர்கள் என போலீஸ் உடையில் ஈரமுள்ளவர்கள் சொல்ல...

எஸ்.ஐ.மணிமாறனை தொடர்புகொண்டு... சந்திராவை துன்புறுத்தியது நீங்கள்தானாமே? என்று கேட்டோம். 

""நான் பண்ணலை. நான்தான் பண்ணி னேன்னு எழுதுறதா இருந்தா எழுதிக்கோ...'' என லைனை கட் செய்துவிட்டார்.

இன்ஸ்பெக்டர் தவமணியோ... ""சந்திரா தான் அக்யூஸ்ட், ஆனா அந்தப் பொம்பளைய எங்க போலீஸ் யாரும் எதுவும் பண்ணலை. இப்படி எங்க போலீஸ் நடந்துக்கிட்டதா சொல்ற தெல்லாம் கடவுளுக்குதான் வெளிச்சம்...'' என துணைக்கு கடவுளை அழைத்துக் கொண்டார்.

""தலைநகர் டெல்லியில், ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவியை கற்பழித்துக் கொன்ற சம்பவத்திற்குபின் 376 என்ற கற்பழிப்புக்கான சட்டப் பிரிவில்... ஒரு பெண்ணினுடைய பிறப்புறுப்பை எந்த பொருள் கொண்டு தொடப்பட்டாலும் அது கற்பழிப்பில் சேர்க்கப்படும் என்று சட்ட திருத்தம் கடுமையாக்கப்பட்டிருக்கிறது. அதன்படி பார்த்தால் இந்த சம்பவம் நாட்டையே அதிர வைக்கும்'' என்கிறார் சந்திரா வழக்கை நடத்தும் வழக்கறிஞரான கண்ணன்.

மொத்தத்தில் ஒரு பெண் ஆளும் தமிழகத்தில் போலீஸ் ஸ்டேஷனிலேயே வைத்து 45 வயதுள்ள ஒரு பெண்ணை நிர்வாணப் படுத்தி சித்திரவதைக்குள்ளாக்கிய சம் பவத்தில்... "சித்திரவதை நான் பண்ணலை...' என எஸ்.ஐ. மணிமாறன் நமக்கு அளித்த பதில் மறைமுகமாய் சொல்கிறது... பண்ணப்பட்டது உண்மைதான் என்று

ad

ad